» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை ஜாஹிர் உசேன் கொலை வழக்கு: குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்!
புதன் 19, மார்ச் 2025 5:01:36 PM (IST)
நெல்லை மாநகரில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்துள்னர்.
நெல்லையில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஜாஹீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பாக இருவர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக முகமது தவுபிக் (எ) கிருஷ்ணமூர்த்தி என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் பெருமாள்புரம் காவநிலையம், ரெட்டியாப்பட்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரலில் போலீசார் விரைந்து சென்றனர். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது, தலைமை காவலர் ஆனந்தை அரிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து முகமது தவுபிக் (எ) கிருஷ்ண மூர்த்தியை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏஐ தொழில்நுட்பம் இல்லாத துறையே இல்லை : கனிமொழி எம்பி பேச்சு
திங்கள் 14, ஜூலை 2025 8:45:26 PM (IST)

தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
திங்கள் 14, ஜூலை 2025 5:49:00 PM (IST)

காப்புரிமை விவகாரம்: நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 14, ஜூலை 2025 4:38:44 PM (IST)

இபிஎஸ் ஒப்புக் கொண்டால் நிபந்தனையின்றி அதிமுகவில் இணைவேன் : ஓபிஎஸ் அறிவிப்பு!
திங்கள் 14, ஜூலை 2025 4:24:50 PM (IST)

பள்ளிகளில் ப வடிவ இருக்கையால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்: பாஜக குற்றச்சாட்டு!
திங்கள் 14, ஜூலை 2025 12:57:07 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!
திங்கள் 14, ஜூலை 2025 12:17:46 PM (IST)
