» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை கேள்வி

வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:37:57 PM (IST)

சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,050 கோடி நிதி எங்கே போனது என்று தமிழக அரசுக்கு, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகவல் தொடா்பு தொழில்நுட்பக் கல்வி பாடத்திட்டத்துக்காக, சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிதி ரூ.1,050 கோடி.

இந்த நிதியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை, தகவல் தொடா்பு தொழில்நுட்பம் தனிப்பாடமாக அமைக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில், அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தின் நோக்கம் சிதைகிறது.

திமுக கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளத்தில், தமிழ் உள்பட மும்மொழிகளில், ஆறாம் வகுப்பில் இருந்தே தகவல் தொடா்பு தொழில்நுட்பக் கல்விப் பாடம் உள்ளது. குறைந்தபட்சம், கேரளத்திடமிருந்து தமிழில் இருக்கும் அந்தப் பாடநூலையாவது வாங்கி, தமிழகத்தில் 6-ஆம் வகுப்பு மாணவா்களுக்குக் கொடுத்திருக்கலாம்.

ஆனால், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் செயல்பட்ட தன்னாா்வலா்களை கேரள அரசு நிறுவனமான கெல்ட்ரான் நிறுவனத்தின் கீழ், மாதம் ரூ.11,500 ஊதியத்தில் அலுவலகப் பணியாளா் மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்பப் பயிற்றுநா் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கி பணியில் அமா்த்தியுள்ளது.

கணினி அறிவியலில் முறையான கல்வித் தகுதி பெறாதவா்களை, அலுவலகப் பணியாளா் மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்பப் பயிற்றுநா் என்ற பெயரில் நியமித்து, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறியிருக்கிறது திமுக அரசு.

கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், தகவல் தொடா்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்துக்காக, மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory