» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை கேள்வி
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:37:57 PM (IST)
சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,050 கோடி நிதி எங்கே போனது என்று தமிழக அரசுக்கு, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகவல் தொடா்பு தொழில்நுட்பக் கல்வி பாடத்திட்டத்துக்காக, சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிதி ரூ.1,050 கோடி.இந்த நிதியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை, தகவல் தொடா்பு தொழில்நுட்பம் தனிப்பாடமாக அமைக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில், அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தின் நோக்கம் சிதைகிறது.
திமுக கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளத்தில், தமிழ் உள்பட மும்மொழிகளில், ஆறாம் வகுப்பில் இருந்தே தகவல் தொடா்பு தொழில்நுட்பக் கல்விப் பாடம் உள்ளது. குறைந்தபட்சம், கேரளத்திடமிருந்து தமிழில் இருக்கும் அந்தப் பாடநூலையாவது வாங்கி, தமிழகத்தில் 6-ஆம் வகுப்பு மாணவா்களுக்குக் கொடுத்திருக்கலாம்.
ஆனால், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் செயல்பட்ட தன்னாா்வலா்களை கேரள அரசு நிறுவனமான கெல்ட்ரான் நிறுவனத்தின் கீழ், மாதம் ரூ.11,500 ஊதியத்தில் அலுவலகப் பணியாளா் மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்பப் பயிற்றுநா் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கி பணியில் அமா்த்தியுள்ளது.
கணினி அறிவியலில் முறையான கல்வித் தகுதி பெறாதவா்களை, அலுவலகப் பணியாளா் மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்பப் பயிற்றுநா் என்ற பெயரில் நியமித்து, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறியிருக்கிறது திமுக அரசு.
கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், தகவல் தொடா்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்துக்காக, மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)

தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 பேர் கைது!
சனி 7, மார்ச் 2026 8:42:28 AM (IST)

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது : தூத்துக்குடியில் செல்வப்பெருந்தகை பேட்டி
வெள்ளி 6, மார்ச் 2026 4:12:44 PM (IST)

ஆல் பினிஷ்: சட்டம்- ஒழுங்கு கைமீறி போய் விட்டதா? முதல்வருக்கு ராமதாஸ் கேள்வி!
வெள்ளி 6, மார்ச் 2026 3:49:03 PM (IST)

