» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 3:22:51 PM (IST)
கால்நடைகளை லாரிகள் மூலம் கொண்டு செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை சென்னை உயர்நீதிமன்றம் வகுத்து, இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
கால்நடைகளை லாரிகளில் கொண்டு செல்லும் போது, அவை நிற்க போதுமான இடவசதி இருக்க வேண்டும். முறையான காற்று வசதி, உணவு, குடிநீர் ஆகியவை கால்நடைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
கால்நடைகள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை மருத்துவ பரிசோதனை செய்த பிறகே லாரிகளில் கொண்டு செல்ல வேண்டும். முறையான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே கால்நடைகளை லாரிகளில் கொண்டு செல்ல வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
கேரளாவுக்கு கடத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கூடிய வழக்கில், இந்த விதிமுறைகளை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் வலியுறுத்தி உள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கோரிய வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
ஞாயிறு 4, ஜனவரி 2026 8:40:14 PM (IST)

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3,000 வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஞாயிறு 4, ஜனவரி 2026 1:06:11 PM (IST)

அ.தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல்: 12-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம்!
ஞாயிறு 4, ஜனவரி 2026 9:32:00 AM (IST)

தோட்டத்தில் கேந்தி பூக்களை டிராக்டர் ஏற்றி அழித்த விவசாயி : விலை வீழ்ச்சியால் விரக்தி
ஞாயிறு 4, ஜனவரி 2026 9:29:00 AM (IST)

தாமிரபரணி தூய்மை திட்டம் உருவாக்க ராஜஸ்தான் நிபுணர் நியமனம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஞாயிறு 4, ஜனவரி 2026 9:02:51 AM (IST)

அரசு மருத்துவமனையில் மதுவிருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்: மருத்துவர்கள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்
சனி 3, ஜனவரி 2026 5:04:50 PM (IST)

