» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 3:22:51 PM (IST)
கால்நடைகளை லாரிகள் மூலம் கொண்டு செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை சென்னை உயர்நீதிமன்றம் வகுத்து, இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
கால்நடைகளை லாரிகளில் கொண்டு செல்லும் போது, அவை நிற்க போதுமான இடவசதி இருக்க வேண்டும். முறையான காற்று வசதி, உணவு, குடிநீர் ஆகியவை கால்நடைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
கால்நடைகள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை மருத்துவ பரிசோதனை செய்த பிறகே லாரிகளில் கொண்டு செல்ல வேண்டும். முறையான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே கால்நடைகளை லாரிகளில் கொண்டு செல்ல வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
கேரளாவுக்கு கடத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கூடிய வழக்கில், இந்த விதிமுறைகளை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் வலியுறுத்தி உள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கோரிய வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:49:42 AM (IST)

திருநெல்வேலி, மானூர் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் திடீர் ஆய்வு
வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:23:25 AM (IST)

தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசவில்லை; மக்களின் கவலைதான் வீசுகிறது : தமிழிசை பேட்டி
வெள்ளி 14, பிப்ரவரி 2025 10:14:58 AM (IST)

தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளர் திடீர் மாற்றம்: புதிய பொறுப்பாளர் நியமனம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:23:30 AM (IST)

காதல் மனைவியை கொன்று உடலை எரித்த கணவர் கைது: பரபரப்பு தகவல்
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:18:12 AM (IST)

மாநிலங்களவை உறுப்பினர் பதவி விவகாரம் : கமல்ஹாசனுடன் உதயநிதி சந்திப்பு!
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:53:38 PM (IST)
