» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 12:41:10 PM (IST)
"தமிழகம் முழுவதும் பாஜகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். உடனடியாக, அவர்களை விடுவிப்பதோடு, ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வழங்க வேண்டும்.” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆனால், தமிழகம் முழுவதுமே, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது போல, பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பென்டகன் ஜி. பாண்டுரங்கன், கோயம்புத்தூர் நகர மாவட்டத் தலைவர் ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் கு.சரவணகிருஷ்ணன், சேலம் நகர மாவட்டத் தலைவர் டிவி சசிக்குமார், மற்றும் பாஜகவினர் பலரையும் கைது செய்தும், வீட்டுக் காவலில் வைத்தும், ஜனநாயக விரோதமாக நடந்து கொள்கிறது திமுக அரசு.
அனைத்துக்கும் ஓர் எல்லை உண்டு. திமுக அமைச்சருக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயமா? பொறுமையும், சகோதரத்துவமும் கொண்ட தமிழக மக்களைச் சீண்டிக் கொண்டே இருக்கும் தேவையற்ற நடவடிக்கைகளுக்குத் துணை செல்வதை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். உடனடியாக, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிப்பதோடு, ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும்: உதயநிதி ஸ்டாலின் தகவல்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:07:08 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:54:19 PM (IST)

சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை கேள்வி
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:37:57 PM (IST)

பெண்களால் தான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் : அமைச்சர் பெ.கீதா ஜீவன் பேச்சு!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:00:28 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:49:42 AM (IST)

திருநெல்வேலி, மானூர் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் திடீர் ஆய்வு
வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:23:25 AM (IST)
