» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு ரூ.3 லட்சத்தில் நினைவிடம்: பணிகள் தீவிரம்!
வெள்ளி 24, ஜனவரி 2025 12:45:26 PM (IST)

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு ரூ. 3 லட்சம் செலவில் நினைவிடம் அமைக்கும் பணி தாமரைகுளம் பகுதியில் துவங்கி நடந்து வருகிறது.
நெல்லையப்பர் கோயிலில் (56) வயதுடைய காந்திமதி என்ற பெண்யானை இருந்தது. கோயில் ஆகம விதிமுறைப்படி சுவாமி, அம்பாளுக்கு தினமும் அபிஷேகத்திற்கு தாமிரபரணி நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருவது, கோயில் திருவிழாக்களில் கொடியேற்றத்தின் போது கொடி பட்டம் வீதிவலம் எடுத்து வருவது, ஆனித்தேரோட்டத்தின் போது சுவாமி தேரின் முன்பாக அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக ரதவீதிகளை வலம் வருவது.
தினமும் கோயிலில் அதிகாலையில் நடைபெறும் கஜபூஜையில் பங்குகொள்வது காந்திமதியின் அன்றாட வேலையாக இருந்து வந்தது. நெல்லையப்பர் கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் செல்லப் பிள்ளையாக விளங்கிவந்த காந்திமதி யானைக்கு உடல்நலக்குறைவால் கடந்த 12ம் தேதி காலையில் உயிரிழந்தது.
இதைத்தொடர்ந்து டவுன் ஆர்ச் அருகில் உள்ள தாமரை குளத்தில் காந்திமதி யானை நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பக்தர்களின் செல்லப்பிள்ளை காந்திமதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி உபயதாரர்கள், கோயில் நிதி உள்பட ரூ. 3 லட்சம் செலவில் நினைவிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
யானை நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் கூலிங் சீட் மேற்கூறையும், கல்தளம், சுற்றிலும் கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து நினைவிடம் அமைப்பதற்காக காந்திமதி யானை புதைக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் காங்கிரீட் மூலம் 4 கம்பிகள் நடப்பட்டது.
இதனை ெதாடர்ந்து நினைவிடத்தை சுற்றிலும் கல்தளம் அமைத்து கம்பி வேலியும் அமைக்கும் பணிநடக்கிறது. இதற்காக கோயில் நிதி, உபயதாரர்கள் மூலம் ரூ. 3 லட்சம் மதிப்பில் நினைவிடம் அமைக்கும் பணி நடந்து வருவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்புபோல் ஊழல் செய்ய முடியாது என்று கவலையா? - முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
புதன் 17, டிசம்பர் 2025 5:42:27 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது என்ன செயல்? நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி
புதன் 17, டிசம்பர் 2025 4:35:36 PM (IST)

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு: கனிமொழி எம்.பி தலைமையில் குழு நியமனம்!
புதன் 17, டிசம்பர் 2025 3:58:09 PM (IST)

அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து மாணவன் பலி : தலைமையாசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 17, டிசம்பர் 2025 3:47:00 PM (IST)


.gif)
BabuJan 25, 2025 - 12:26:16 PM | Posted IP 172.7*****