» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆளுநரால் தி.மு.க.வுக்கு ஆதரவும் அதிகரிக்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
வெள்ளி 24, ஜனவரி 2025 12:24:51 PM (IST)
தமிழக ஆளுநரால் தி.மு.க.வுக்கு ஆதரவும் அதிகரிக்கிறது. தயவு செய்து ஆளுநரை மாற்றி விடாதீர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3000-க்கும் மேற்பட்ட நா.த.க உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: பிற கட்சி பொறுப்பில் பணியாற்றிய நீங்கள் தலைமை முறையாக இல்லை என்பதால் தி.மு.க.வில் இணைந்துள்ளீர்கள். பிற கட்சியிலிருந்த நீங்கள் தலைமை சரியில்லை என்பதை உணர்ந்து வர வேண்டிய கட்சிக்கு வந்து சேர்ந்துள்ளீர்கள். தி.மு.க. நேற்று முளைத்த காளான் அல்ல. 1949-ல் அண்ணா வடசென்னையில் கொட்டும் மழையில் தொடங்கிய இயக்கம்.
1949-ல் தி.மு.க. தொடங்கப்பட்ட நிலையில் 1957-ல் தான் தேர்தல் களத்தை சந்தித்த வளர்த்தெடுக்க இயக்கம் தி.மு.க. 1957-ல் 15 இடங்களில் தான் வெற்றி பெற்றோம். 1962-ல் 50-க்கும் மேற்பட்ட இடத்தில் வென்று எதிர்க்கட்சியானது தி.மு.க. ஆட்சியில் அமர்வதற்கு அல்ல; ஏழை - எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொண்டாற்ற தான் தி.மு.க. தொடங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி என்ற பெயரை சொல்லவே நாங்கள் தயாராக இல்லை. தமிழருக்காக பாடுபடும் கட்சி என்றால் அக்கட்சியின் பெயரை உச்சரிக்கலாம்.
தற்போது கட்சி ஆரம்பிப்பவர்கள் உடனேயே ஆட்சி அதிகாரத்தில் அமர்வதாக பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். வேஷம் கட்டிக்கொண்டு திரிபவர்களை அடையாளப்படுத்துவதற்கு நான் விரும்பவில்லை. திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு ஆவேசம் வருகிறது.
மதத்தை மையமாக வைத்து பேசும் ஆளுநரால் தி.மு.க. மேலும் வளருகிறது. தி.மு.க.வுக்கு ஆதரவும் அதிகரிக்கிறது. தமிழக ஆளுநரை தயவு செய்து மாற்றி விடாதீர்கள் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். 7-வது முறையாக நிச்சயமாக தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என உறுதியாக சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எத்தனை 'கெட்டப்' போட்டு வந்தாலும் களம் நமதே!- தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:37:26 PM (IST)

பெரியார் சிலை அருகே நா.த.க பொதுக்கூட்டம் நடத்த அனுமதியில்லை : உயர்நீதிமன்றம்
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:33:53 PM (IST)

மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும்: உதயநிதி ஸ்டாலின் தகவல்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:07:08 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:54:19 PM (IST)

சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை கேள்வி
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:37:57 PM (IST)

பெண்களால் தான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் : அமைச்சர் பெ.கீதா ஜீவன் பேச்சு!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:00:28 PM (IST)
