» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் அறிவிப்பு!

வெள்ளி 24, ஜனவரி 2025 11:38:44 AM (IST)

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் -  கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக ஜன.24 மற்றும் ஜன.26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து இன்று (ஜன.24) கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இரவு 10.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நாளை (ஜன.25) நள்ளிரவு 12 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறு மார்க்கத்தில் ஜன.26 இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயில் ஜன.27 காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஜன.24 இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் (ஜன.25) மாலை 6.05 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். மறுமார்க்கமாக, ஜன.26ல் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஜன.27 மதியம் 2 மணிக்கு சென்ட்ரல் வரும். பயணிகள் அனைவரும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து சிறப்பு ரயில்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory