» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெரியார் குறித்து அவதூறாக பேச்சு : சீமான் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 10, ஜனவரி 2025 8:32:03 PM (IST)
பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவில் மனுதாரரின் புகாரை பெற்று நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடலூரில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், பெரியாா் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது பேச்சுக்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதைக் கண்டித்து திராவிடா் இயக்கம், பெரியாரிய இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே இந்த விவகாரத்தில் சீமானின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெரியார் பற்றி சீமான் கூறும் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளது. எனவே, விரைந்து நடவடிக்கை எடுத்து அறிக்கையை ஜனவரி 20ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் திருமண்டல ஸ்தோத்திரப் பண்டிகை நிறைவு விழா : ரூ.12 லட்சம் நலத்திட்ட உதவிகள்!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:54:53 PM (IST)

மக்காச்சோளத்தில் விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு : விவசாயி கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:52:16 PM (IST)

நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்: டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி உத்தரவு
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:45:38 PM (IST)

வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை : வன ஊழியர் கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:44:07 PM (IST)

காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 26, அக்டோபர் 2025 9:02:17 AM (IST)

திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே கந்த சஷ்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 25, அக்டோபர் 2025 7:33:03 PM (IST)


.gif)