» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொங்கல் வேட்டி, சேலைகள் குறித்து தவறாக சித்தரிப்பு: பாளை., வட்டாட்சியர் விளக்கம்
திங்கள் 9, டிசம்பர் 2024 5:30:58 PM (IST)
மழை வெள்ளத்தால் சேதமான வேட்டி, சேலைகளை அப்புறப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளதை தவறாக சித்தரிக்க வேண்டாம் என பாளையங்கோட்டை வட்டாட்சியர் இசைவாணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கடந்த டிசம்பர் 2023-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது மாவட்டத்தில் 46 நியாய விலைக் கடைகள் மற்றும் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் வெள்ள நீர் புகுந்து சேதமடைந்தது. அப்போது பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக இருப்பில் வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகள் வெள்ளத்தால் சேதமடைந்தது.
இதுகுறித்து முறையாக துறை தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதனடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு முறைப்படி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய தணிக்கை அனுமதி பெற்ற பின்னர் அழிக்கும் பொருட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செய்திகளை வெளியிடும்பொழுது அனைத்து தரப்பு கருத்துக்களையும் முழுமையாக கேட்டு தெரிந்து கொண்டு செய்தி வெளியிடுமாறு பாளையங்கோட்டை வட்டாட்சியர் இசைவாணி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கப்பலில் இறந்த 3பேருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:48:22 PM (IST)

போதைப் பொருள் என்பது ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் : அமைச்சர் பி.கீதா ஜீவன் பேச்சு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:31:17 PM (IST)

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான விதிமுறைகள் : த.வெ.க. வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:12:16 PM (IST)

முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பயிர்களை பயிரிட வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத்.
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:35:38 PM (IST)

திமுக உடன் கூட்டணி கிடையாது.. அதையும் தாண்டி புனிதமானது - கமல்ஹாசன் விளக்கம்
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:20:49 PM (IST)
