» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொங்கல் வேட்டி, சேலைகள் குறித்து தவறாக சித்தரிப்பு: பாளை., வட்டாட்சியர் விளக்கம்
திங்கள் 9, டிசம்பர் 2024 5:30:58 PM (IST)
மழை வெள்ளத்தால் சேதமான வேட்டி, சேலைகளை அப்புறப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளதை தவறாக சித்தரிக்க வேண்டாம் என பாளையங்கோட்டை வட்டாட்சியர் இசைவாணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கடந்த டிசம்பர் 2023-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது மாவட்டத்தில் 46 நியாய விலைக் கடைகள் மற்றும் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் வெள்ள நீர் புகுந்து சேதமடைந்தது. அப்போது பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக இருப்பில் வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகள் வெள்ளத்தால் சேதமடைந்தது.
இதுகுறித்து முறையாக துறை தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதனடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு முறைப்படி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய தணிக்கை அனுமதி பெற்ற பின்னர் அழிக்கும் பொருட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செய்திகளை வெளியிடும்பொழுது அனைத்து தரப்பு கருத்துக்களையும் முழுமையாக கேட்டு தெரிந்து கொண்டு செய்தி வெளியிடுமாறு பாளையங்கோட்டை வட்டாட்சியர் இசைவாணி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா ஜிபிஎஸ் வாகனங்கள்: ஏடிஜிபி துவக்கி வைத்தார்
சனி 5, ஜூலை 2025 8:00:37 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!
சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
சனி 5, ஜூலை 2025 4:39:34 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
சனி 5, ஜூலை 2025 11:43:12 AM (IST)

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம் : விரைவில் திறப்பு விழா!
சனி 5, ஜூலை 2025 8:58:51 AM (IST)
