» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொங்கல் வேட்டி, சேலைகள் குறித்து தவறாக சித்தரிப்பு: பாளை., வட்டாட்சியர் விளக்கம்
திங்கள் 9, டிசம்பர் 2024 5:30:58 PM (IST)
மழை வெள்ளத்தால் சேதமான வேட்டி, சேலைகளை அப்புறப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளதை தவறாக சித்தரிக்க வேண்டாம் என பாளையங்கோட்டை வட்டாட்சியர் இசைவாணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கடந்த டிசம்பர் 2023-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது மாவட்டத்தில் 46 நியாய விலைக் கடைகள் மற்றும் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் வெள்ள நீர் புகுந்து சேதமடைந்தது. அப்போது பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக இருப்பில் வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகள் வெள்ளத்தால் சேதமடைந்தது.
இதுகுறித்து முறையாக துறை தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதனடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு முறைப்படி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய தணிக்கை அனுமதி பெற்ற பின்னர் அழிக்கும் பொருட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செய்திகளை வெளியிடும்பொழுது அனைத்து தரப்பு கருத்துக்களையும் முழுமையாக கேட்டு தெரிந்து கொண்டு செய்தி வெளியிடுமாறு பாளையங்கோட்டை வட்டாட்சியர் இசைவாணி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி: டிடிவி தினகரன் விமர்சனம்!
ஞாயிறு 5, ஜூலை 2026 9:05:48 PM (IST)

கூட்டுறவு வங்கியில் துணிகரக் கொள்ளை முயற்சி : லாக்கரை உடைக்க முடியாதால் நகை தப்பியது
ஞாயிறு 5, ஜூலை 2026 2:28:21 PM (IST)

தூத்துக்குடி ஆலயத்தில் நிதிமுறைகேடு புகார் : சபை மக்கள் ஆர்ப்பாட்டம்- பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 2:03:21 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
ஞாயிறு 5, ஜூலை 2026 11:35:30 AM (IST)

தென்பழனி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் 16-ஆம் ஆண்டு வருசாபிஷேகம் கோலாகலம்
ஞாயிறு 5, ஜூலை 2026 10:48:23 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்: நெல்லை சரக டிஐஜி உத்தரவு!
சனி 4, ஜூலை 2026 9:05:42 PM (IST)


