» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடை வாடகை மீதான 18% ஜிஎஸ்டியை கண்டித்து ஜன.11ல் ஆா்ப்பாட்டம்: விக்கிரமராஜா
ஞாயிறு 8, டிசம்பர் 2024 10:35:33 AM (IST)
கடை வாடகை மீதான 18 சதவித ஜிஎஸ்டியை கண்டித்து ஜன. 11-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்தாா்.
பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பின்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடை வாடகை மீதான 18 சதவித ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும். ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயா்வு மற்றும் வணிக உரிமைக் கட்டண உயா்வு, தொழில் வரி உயா்வு ஆகியவற்றை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி, ஜன. 11-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறதோ, அங்கேயே தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டிச. 17-ஆம் தேதி திருச்சியில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை தொடங்கியது!
சனி 18, அக்டோபர் 2025 11:54:51 AM (IST)

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு!
சனி 18, அக்டோபர் 2025 11:21:48 AM (IST)

தமிழகத்தில் அக்டோபர் 21ம் தேதி விடுமுறை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சனி 18, அக்டோபர் 2025 10:43:51 AM (IST)

கோரம்பள்ளம் வடிநிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
சனி 18, அக்டோபர் 2025 8:53:28 AM (IST)

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் : புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:49:58 PM (IST)

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் : பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:16:40 PM (IST)

J.J.JDec 8, 2024 - 01:55:23 PM | Posted IP 162.1*****