» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5,000 : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!
திங்கள் 2, டிசம்பர் 2024 4:08:54 PM (IST)
புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 5,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தபோது புதுச்சேரியில் கனமழை பெய்தது. அங்கு பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு நிவாரணங்களை முதல்வர் ரங்கசாமி இன்று அறிவித்தார். அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 5,000 வழங்கப்படும். புதுச்சேரியில் கனமழைக்கு 4 பேர் உயிரிழந்தயடுத்து நால்வரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
மேலும் கனமழையால் உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ. 40,000, ஆட்டிற்கு ரூ. 20,000, சேதமடைந்த படகு ஒன்றுக்கு ரூ. 10,000, முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 20,000, விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை: கோவையில் இருந்து புறப்பட்ட 50 பஸ்கள் எல்லையில் நிறுத்தம்!
புதன் 9, ஜூலை 2025 11:36:56 AM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

அதிகாரிகள் கொடுமையால் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை: அன்புமணி குற்றச்சாட்டு
புதன் 9, ஜூலை 2025 10:46:28 AM (IST)

தமிழகத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!
புதன் 9, ஜூலை 2025 10:35:19 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் கடமையை செய்வேன்: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 8:12:52 PM (IST)
