» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தாம்பரம்- நெல்லை இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 23, அக்டோபர் 2024 4:10:57 PM (IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 3-ம் தேதி (ஞாயிற்று கிழமை) மதியம் 2.00 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06003), மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நவம்பர் 4 -ம் தேதி (திங்கள் கிழமை) மதியம் 02.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06004), மறுநாள் காலை 5.15 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.