» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாம்பரம்- நெல்லை இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

புதன் 23, அக்டோபர் 2024 4:10:57 PM (IST)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு   தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 3-ம் தேதி (ஞாயிற்று கிழமை) மதியம் 2.00 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06003), மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். 

மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நவம்பர் 4 -ம் தேதி (திங்கள் கிழமை) மதியம் 02.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06004), மறுநாள் காலை 5.15 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory