» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடன் தொல்லையால் விபரீதம்: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை!
வியாழன் 11, ஜூலை 2024 12:46:05 PM (IST)
பணகுடியில் கடன் தொல்லையால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது
நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ரமேஷ் ( 41), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு ராபின் (14) என்ற மகனும், காவியா (11) என்ற மகளும் உண்டு. அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ராபின் 9-ம் வகுப்பும், காவியா 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்த ரமேஷ் கடந்த 10 மாதங்களுக்கு முன் தனது மனைவியை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி ைவத்தார்.
இதற்காக ரமேஷ் தனக்கு தெரிந்த நபர்களிடம் கடன் வாங்கினார். பின்னர் அவர் பணத்தை திருப்பி கொடுக்காததால், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வந்தனர். பணத்தை திருப்ப கொடுக்க முடியாததாலும், தனது மனைவி வெளிநாட்டுக்கு சென்ற பிரிவை தாங்க முடியாமலும் ரமேஷ் மனவேதனையில் இருந்து வந்தார்.
நேற்று காலையில் வெகு நேரமாகியும் ரமேஷ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தனர். அப்போது ரமேஷ், அவருடைய மகன் ராபின், மகள் காவியா ஆகியோர் வாயில் நுரை தள்ளியவாறு இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். இறந்து கிடந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை மற்றும் மனைவி வெளிநாடு சென்ற ஏக்கத்தில் ரமேஷ் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் தனது 2 குழந்தைகளுக்கும் வாழைப்பழத்தில் குருணை மருந்து (விஷம்) கலந்து கொடுத்தார். பின்னர் தானும் அதனை சாப்பிட்டுள்ளார். இதில் 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கும் இயக்குனர் சுந்தர்.சி: இரட்டை இலை சின்னத்தில் போட்டி
சனி 28, மார்ச் 2026 12:55:26 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் 2026: ஏப்.23 பொது விடுமுறை! 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்!
சனி 28, மார்ச் 2026 12:14:05 PM (IST)

மாணவிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: நெல்லை அருகே சிக்கிய பேராசிரியர்
சனி 28, மார்ச் 2026 11:41:58 AM (IST)

திரையை விட தரையில் அதிகம் நடிக்கிறார்: விஜய் மீது சீமான் கடும் சாடல்!
சனி 28, மார்ச் 2026 11:03:11 AM (IST)

புதுப்பொலிவு பெறும் பழைய குற்றால அருவி : விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சனி 28, மார்ச் 2026 10:26:53 AM (IST)

தூத்துக்குடியில் நாளை முதல் இரவு நேர விமான சேவை தொடக்கம்: கால அட்டவணை மாற்றம்!
சனி 28, மார்ச் 2026 8:54:13 AM (IST)

