» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடன் தொல்லையால் விபரீதம்: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை!
வியாழன் 11, ஜூலை 2024 12:46:05 PM (IST)
பணகுடியில் கடன் தொல்லையால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது
நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ரமேஷ் ( 41), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு ராபின் (14) என்ற மகனும், காவியா (11) என்ற மகளும் உண்டு. அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ராபின் 9-ம் வகுப்பும், காவியா 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்த ரமேஷ் கடந்த 10 மாதங்களுக்கு முன் தனது மனைவியை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி ைவத்தார்.
இதற்காக ரமேஷ் தனக்கு தெரிந்த நபர்களிடம் கடன் வாங்கினார். பின்னர் அவர் பணத்தை திருப்பி கொடுக்காததால், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வந்தனர். பணத்தை திருப்ப கொடுக்க முடியாததாலும், தனது மனைவி வெளிநாட்டுக்கு சென்ற பிரிவை தாங்க முடியாமலும் ரமேஷ் மனவேதனையில் இருந்து வந்தார்.
நேற்று காலையில் வெகு நேரமாகியும் ரமேஷ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தனர். அப்போது ரமேஷ், அவருடைய மகன் ராபின், மகள் காவியா ஆகியோர் வாயில் நுரை தள்ளியவாறு இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். இறந்து கிடந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை மற்றும் மனைவி வெளிநாடு சென்ற ஏக்கத்தில் ரமேஷ் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் தனது 2 குழந்தைகளுக்கும் வாழைப்பழத்தில் குருணை மருந்து (விஷம்) கலந்து கொடுத்தார். பின்னர் தானும் அதனை சாப்பிட்டுள்ளார். இதில் 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் திருமண்டல ஸ்தோத்திரப் பண்டிகை நிறைவு விழா : ரூ.12 லட்சம் நலத்திட்ட உதவிகள்!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:54:53 PM (IST)

மக்காச்சோளத்தில் விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு : விவசாயி கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:52:16 PM (IST)

நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்: டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி உத்தரவு
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:45:38 PM (IST)

வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை : வன ஊழியர் கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:44:07 PM (IST)

காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 26, அக்டோபர் 2025 9:02:17 AM (IST)

திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே கந்த சஷ்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 25, அக்டோபர் 2025 7:33:03 PM (IST)


.gif)