» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யும் தவெக அரசு : ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 7:51:23 AM (IST)



விளாத்திகுளத்தில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 40% என நிர்ணயம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் அமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு மாபெரும் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஒரு ஆசிரியர், தற்போது உள்ள தமிழக அரசு " ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட்” செய்துள்ளார், ஊரான் வீடு என்றால் வேறு எதுவும் கிடையாது நமது வரிப்பணம் தான், கஜானா காலி என்பது இல்லை  அது நிறைவாகத்தான் உள்ளது மனம் இருந்தால் ஆசிரியரின் கோரிக்கைகளை தாராளமாக நிறைவேற்றலாம்,நேற்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சட்டசபையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சொகுசு கார் மற்றும் பராமரிப்பு செலவு 75 ஆயிரம், உதவியாளர் சம்பளம் 25 ஆயிரம் அறிவித்ததை சுட்டிக்காட்டி தங்களின் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டசெயலாளர் தலைமை ஜீவானந்தம் வகித்தார், கோவில்பட்டி கல்வி மாவட்ட தலைவர் ரவீந்திரராஜன் முன்னிலை வகித்தார், தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவர் சேர்மகனி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் இப்ராகிம் உட்பட பலர் கலந்து கொண்டனர், இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.


மக்கள் கருத்து

MmanoharanAug 21, 2026 - 08:42:06 PM | Posted IP 104.2*****

நடிகனை தேர்ந்து எடுத்த அரசு ஊழியர்களுக்கு அவர் எதுவும் செய்யமாட்டார் இன்னும் நான்கு வருடங்கள் கஷ்டம்தான்

MmanoharanAug 21, 2026 - 08:39:41 PM | Posted IP 162.1*****

அரசு ஊழியர்கள் அதிகமாக ஓட்டு போட்டு தேடிவைத்தநபர்க்கு உண்மையான வாழ்க்கை தெரியாது படிக்க மட்டும் தெரியும் என்ன செய்ய இன்னும் நான்கு வருடங்கள் இதுதான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory