» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு - ஆக.21ல் நடைபெறும் என அறிவிப்பு!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:15:46 AM (IST)

தூத்துக்குடியில் நாளை (ஆகஸ்ட் 14-ஆம் தேதி) நடைபெறவிருந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், உள்ளூர் விடுமுறை காரணமாக ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாதந்தோறும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான முகாம் நாளை (14.08.2026 - வெள்ளிக்கிழமை) கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற இருந்தது.

எனினும், கயத்தாறு வட்டம் காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள 'தூய பரலோக மாதா பேராலயத் திருவிழாவை' முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 14) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் 21.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் என உதவி இயக்குநர் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

Sakthi Balan. SAug 13, 2026 - 09:17:15 PM | Posted IP 172.7*****

This kind of camp is helful for the students to get the job in the earliest period

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory