» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இலவசமாக மணல் கேட்டு மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் - காவலர் பணி இடைநீக்கம்: எஸ்.பி., அதிரடி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:41:43 AM (IST)
நெல்லையில் வீடு கட்டுவதற்கு இலவசமாக மணல் கேட்டுத் தொழில் அதிபரை மிரட்டிய புகாரில், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்துள்ளார்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் பாலாமடை பகுதியில் கிரஷர் மற்றும் எம்.சாண்ட் மணல் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவரது நிறுவனத்திற்கு வந்த இரண்டு போலீசார், தாங்கள் வீடு கட்டுவதற்கு இலவசமாக மணல் தர வேண்டும் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்துச் சுந்தரராஜன் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமாரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது: "தாழையூத்து காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் காவலர் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் எனது கிரஷருக்கு வந்து, எம்.சாண்ட் மணலை இலவசமாகத் தர வேண்டும் என்று கேட்டனர். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், என்னைத் தகாத வார்த்தைகளால் மிரட்டிவிட்டுச் சென்றனர்."
தொழில் அதிபரின் புகாரைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில் புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் காவலர் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேற்று அதிரடி உத்தரவிட்டார்.
காவல்துறையைச் சேர்ந்தவர்களே அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இலவசமாக மணல் கேட்டு மிரட்டிய சம்பவமும், அதற்கு உடனடியாக எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையும் நெல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இருசக்கர வாகனங்கள் மோதல்: பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு - வாலிபர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:47:28 AM (IST)

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)


தமிழ்ச்செல்வன்Apr 2, 2026 - 12:05:42 PM | Posted IP 172.7*****