» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று : 700 விசைப்படகுகள் கரைதிரும்பின
புதன் 26, நவம்பர் 2025 3:35:40 PM (IST)

குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று எச்சரிக்கை காரணமாக 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைதிரும்பின.
தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு ,நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் கடற்கரை மற்றும் துறைமுகங்களில் மீனவர் விசைப்படகு, மற்றும் வள்ளங்களை பத்திரமாக நிறுத்தி வைத்தனர். சின்னமுட்டம்,குளச்சல், தேங்காய்பட்டணம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகஙகளில் இருந்து சுமார் 2200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றன.
இதில் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு சுமார் 700க்கு மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிவிட்டன. 400க்கு மேற்பட்ட விசைப்படகுகள் தகவல் கொடுப்பட்டதாகவும் மீனவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் திரும்பிய படகுகளை மீனவர்கள் பத்திரமாக தரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு இளஞ்சிறார்கள் உட்பட 5பேர் கைது: 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
புதன் 26, நவம்பர் 2025 11:08:54 AM (IST)

குமரி மாவட்ட ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:23:14 PM (IST)

தமிழ் வழியில் பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு காமராஜர் விருது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 12:26:17 PM (IST)

நியாய விலை கடைகளுக்கு புதிய எந்திரங்கள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்!
திங்கள் 24, நவம்பர் 2025 5:01:54 PM (IST)

முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஆன்மிகச் சுடர் விருது: பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார்
திங்கள் 24, நவம்பர் 2025 3:25:54 PM (IST)

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்திவைப்பு: விஜய் வசந்த் எம்.பி. தகவல்
சனி 22, நவம்பர் 2025 12:02:54 PM (IST)


.gif)