» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி தந்தை மார்ஷல் நேசமணி நினைவு நாள்: ஆட்சியர் அழகுமீனா மரியாதை!

திங்கள் 2, ஜூன் 2025 12:02:04 PM (IST)



குமரி தந்தை மார்ஷல் நேசமணி நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

கன்னியாகுமரி மாவட்டம், குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின், 57-வது நினைவுநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் நாகர்கோவில் மார்ஷல் நேசமணி அவர்களின் மணிமண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேற்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், மார்ஷல் நேசமணி அவர்களின் பேரன் ரெஞ்சித் அப்பலோஸ், தயாபதி நளதம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வலெட்சுஷ்மா, மார்ஷல் நேசமணி அவர்களின் கொள்ளுப்பேத்தி குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory