» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது : பைக் பறிமுதல்
வெள்ளி 9, மே 2025 8:20:51 AM (IST)
தூத்துக்குடி அருகே பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சிவகளையைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி பேச்சியம்மாள்(33). இவர் தனது சொந்த ஊரான தெய்வச்செயல்புரத்தில் நடைபெற்ற கோயில் கொடைவிழாவில் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு கீழத் தெரு வழியாக நடந்து வந்துகொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர், பேச்சியம்மாள் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினாராம். இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், தாளமுத்துநகர் சிலுவைப்பட்டியை சேர்ந்த சிலுவைராஜ் மகன் அந்தோணி லாசர்(32) என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, நகையை மீட்டதுடன், பைக்கை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெள்ள அபாய அளவை எட்டிய பேச்சிப்பாறை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 5:36:20 PM (IST)

குடிநீரின் குளோரினேஷன் அளவு : ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:50:06 PM (IST)

குமரி மாவட்ட முதல்வர் மருந்தக சேமிப்பு குடோனில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 23, அக்டோபர் 2025 11:06:33 AM (IST)

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் : காவல் துறை அழைப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 3:36:41 PM (IST)

தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:56:25 PM (IST)

இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
திங்கள் 20, அக்டோபர் 2025 9:46:32 AM (IST)


.gif)
ஆதி திருவைகுண்டம்மே 9, 2025 - 09:15:35 AM | Posted IP 172.7*****