» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
10 வயது சிறுமி பலாத்காரம்: சிறுவன் உள்பட 2 பேர் கைது
புதன் 12, பிப்ரவரி 2025 9:03:58 PM (IST)
பத்தனம்திட்டா அருகே 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பத்தனம்திட்டா மாவட்டம் அடூரை சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுவன், அந்த சிறுமியின் வாயை மூடி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த எர்ணாகுளத்தை சேர்ந்த சுதீஷ் (33) என்ற வாலிபர், சிறுவனுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதை தொடர்ந்து, சிறுமி சத்தம் போடவே இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அடூர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் 2 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் 2 பேரையும் கைது செய்த போலீசார் சுதீஷை சிறையிலும், 16 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிருஷ்ணன்கோவில் நியாயவிலைக்கடையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
புதன் 19, மார்ச் 2025 5:07:27 PM (IST)

வேலைவாய்ப்புகளை பெருக்க தவறிய மத்திய அரசு: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி பேச்சு
புதன் 19, மார்ச் 2025 4:14:06 PM (IST)

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக பணிகள் விரைவில் துவங்கும்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:49:03 PM (IST)

கன்னியாகுமரியில் மும்பை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்
செவ்வாய் 18, மார்ச் 2025 11:49:32 AM (IST)

ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:35:02 AM (IST)

நாகர்கோவிலில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் இயக்கம் : தெற்கு ரயில்வே தகவல்!
செவ்வாய் 18, மார்ச் 2025 11:03:29 AM (IST)
