» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
10 வயது சிறுமி பலாத்காரம்: சிறுவன் உள்பட 2 பேர் கைது
புதன் 12, பிப்ரவரி 2025 9:03:58 PM (IST)
பத்தனம்திட்டா அருகே 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பத்தனம்திட்டா மாவட்டம் அடூரை சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுவன், அந்த சிறுமியின் வாயை மூடி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த எர்ணாகுளத்தை சேர்ந்த சுதீஷ் (33) என்ற வாலிபர், சிறுவனுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதை தொடர்ந்து, சிறுமி சத்தம் போடவே இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அடூர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் 2 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் 2 பேரையும் கைது செய்த போலீசார் சுதீஷை சிறையிலும், 16 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)
