» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் போக்குவரத்து போலீசார் சோதனை: 14 வாகனங்களுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்!
செவ்வாய் 21, ஜனவரி 2025 5:44:23 PM (IST)

தூத்துக்குடியில் கல்லூரி முன்பு போக்குவரத்து போலீசார் திடீர் சோதனை நடத்தி 14 இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 20 அபராதம் விதித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் நகர துணை காவல் கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ். வெங்கடேசன் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் ஆங்காங்கே இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பாளை., ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி முன்பு போக்குவரத்து உதவி ஆய்வாளர் சதீஷ் தலைமையில் போக்குவரத்து காவல் துறையினர் இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன சோதனையில் 14 இரு சக்கர வாகனம் பிடிபட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக போக்குவரத்து காவல் துறையினர் தொடர்ந்து வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
மக்கள் கருத்து
தூத்துக்குடி தமிழன்Jan 22, 2025 - 11:00:33 PM | Posted IP 172.7*****
பாராட்டு ஒன்னும் இல்லை.... அவங்களுக்கு வருமானம் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க... ஊருக்குள்ள ஒருத்தனும் ஹெல்மெட் போட மாட்டுக்கான் அவனை பிடிக்க வக்கு இல்ல லோட் வண்டிட்ட காசு வாங்கிட்டு வுட்ருவாங்க... நாலாம் கேட் பழக்கடகாரன் முன்னாடி கேமரா வச்சா தெரியும்
செ.நடராஜன்Jan 22, 2025 - 02:26:55 PM | Posted IP 162.1*****
அரசியல் தலையீடு இல்லாமல் தவறுசெய்யும் அனைவர்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கணும்.
manithanJan 22, 2025 - 10:48:13 AM | Posted IP 172.7*****
அனைத்து வண்டிகளின் சைலன்சர் பைப்புகளை கழட்டி விடவேண்டும்.
வஉசிJan 22, 2025 - 05:22:21 AM | Posted IP 162.1*****
கல்லூரி மாணவர்கள் உயர் ரக பைக்குகளில் ஓட்டுநர் உரிமம் இல்லாமலேதான் ஓட்டி வருகின்றனர் பெரும்பாலும்...அதுவும் அந்த உர்...உர்ன்னு சவுண்டு வேற..படிக்க வருதுகளா...இல்ல ஊர் மேய வருதுகளா
JosephJan 21, 2025 - 10:09:19 PM | Posted IP 162.1*****
மக்களுக்கு அச்சுறுத்தல் செய்யும் வகையில் வேகமாக வாகனத்தை இயக்கம் இவர்களை தடை செய்தால்தான் தொடர்ந்து இப்படிப்பட்ட நிலை ஏற்படாது வரவேற்க வேண்டிய விஷயம்
இம்மானுவேல் குணசிங், தூத்துக்குடி மாவட்ட நிருபர்.Jan 21, 2025 - 09:57:59 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடியில் அதிக படியான இரு சக்கர வாகனங்கள் நம்பர் பிளேட் இல்லாமல் சர்வசாதாரணமாக உலாவி வருகிறது இது யார் மெத்தன பொங்கு என்று கூற முடியவில்லை. காவல் துறை தங்கள் கடமையை குறைத்து கொள்ளாமல் மக்கள் சேவை செய்தால் இதுபோன்று பாராட்டுகள் குவியும். மீண்டும் காவல் துறையின் அதிகாரம் மரியாதை மற்றும் சட்டத்தின் பால் பயணம் தவறு செய்யும் நபர்களுக்கு உண்டாகும்.
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!
சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை : நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
சனி 15, பிப்ரவரி 2025 3:42:45 PM (IST)

கனிமவளங்களை கடத்த அரசே அனுமதி அளிப்பதா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
சனி 15, பிப்ரவரி 2025 11:57:45 AM (IST)

கோழிக்கோடு சி.எஸ்.ஐ. தமிழ் ஆலய பிரதிஷ்டை விழா: குமரிப் பேராயர் செல்லையா பங்கேற்பு!
சனி 15, பிப்ரவரி 2025 8:32:14 AM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:48:59 PM (IST)

நாகர்கோவிலில் பிப்.19ம் தேதி 6வது புத்தகத் திருவிழா தொடக்கம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:53:01 PM (IST)

KarthikJan 23, 2025 - 02:27:28 AM | Posted IP 162.1*****