» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் மாட்டுப்பொங்கல் திருவிழா....!
வியாழன் 16, ஜனவரி 2025 4:13:09 PM (IST)

நாகர்கோவிலில், ஜீவகாருண்யா விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக, நேற்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.
அறக்கட்டளையின் நிறுவனர், ஷோபா தலைமையில், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாடுகளுக்கு திலகமிட்டு, பொங்கல் வைத்து கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம், பாண்டிய சிலம்ப அகடமி, ஆசான் தங்கபாண்டியன் தலைமையில், கிராமிய மற்றும் சிலம்பக் கலைக்குழு, கிராமிய சிலம்பாட்டம், வீர விளையாட்டுக்கள், நடனங்கள் போன்ற வீர சாகச நிகழ்ச்சிகள் நடத்தினர். மறைந்து வரும் சிவகங்கை மருதுபாண்டி சகோதரர்களின், தமிழர் வீர விளையாட்டான, வளறி தற்காப்பு விளையாட்டும் நடைபெற்றன.
அதன் நினைவாக தமிழர்களின் தற்காப்பு வளறி ஆயுதத்தை, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு எம் ஆர் காந்தி அவர்களுக்கும், தமிழ்நாடு நடசாரி சிலம்பாட்ட கழக தலைவர் ஜே. அர்னால்டு அரசு அவர்களுக்கும், பைரவி அறக்கட்டளை ஷோபா அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஐயப்பா மகளீர் கல்லூரி பேராசிரியை மற்றும் மாணவிகள், முன்னாள் கால்நடைத்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நிர்வாகிகள், மேட்பர்வையாளர்கள், அட்வொகேட்ஸ் கீரெஷா பிரசாத், சஞ்சய், வடக்கன்குளம் கருணை இல்லம் நிர்வாகிகள், மரியாச்செல்வமணி, தாமஸ், மைக்கேல் ஜார்ஜ், கண்மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமாரியில் ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது!
சனி 25, அக்டோபர் 2025 11:55:11 AM (IST)

குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு
சனி 25, அக்டோபர் 2025 10:59:02 AM (IST)

அரையாண்டு விடுமுறை: தென்மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு..!
சனி 25, அக்டோபர் 2025 8:42:07 AM (IST)

குமரியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை: அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
சனி 25, அக்டோபர் 2025 8:34:53 AM (IST)

வெள்ள அபாய அளவை எட்டிய பேச்சிப்பாறை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 5:36:20 PM (IST)

குடிநீரின் குளோரினேஷன் அளவு : ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:50:06 PM (IST)


.gif)