» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் மாட்டுப்பொங்கல் திருவிழா....!
வியாழன் 16, ஜனவரி 2025 4:13:09 PM (IST)

நாகர்கோவிலில், ஜீவகாருண்யா விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக, நேற்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.
அறக்கட்டளையின் நிறுவனர், ஷோபா தலைமையில், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாடுகளுக்கு திலகமிட்டு, பொங்கல் வைத்து கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம், பாண்டிய சிலம்ப அகடமி, ஆசான் தங்கபாண்டியன் தலைமையில், கிராமிய மற்றும் சிலம்பக் கலைக்குழு, கிராமிய சிலம்பாட்டம், வீர விளையாட்டுக்கள், நடனங்கள் போன்ற வீர சாகச நிகழ்ச்சிகள் நடத்தினர். மறைந்து வரும் சிவகங்கை மருதுபாண்டி சகோதரர்களின், தமிழர் வீர விளையாட்டான, வளறி தற்காப்பு விளையாட்டும் நடைபெற்றன.
அதன் நினைவாக தமிழர்களின் தற்காப்பு வளறி ஆயுதத்தை, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு எம் ஆர் காந்தி அவர்களுக்கும், தமிழ்நாடு நடசாரி சிலம்பாட்ட கழக தலைவர் ஜே. அர்னால்டு அரசு அவர்களுக்கும், பைரவி அறக்கட்டளை ஷோபா அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஐயப்பா மகளீர் கல்லூரி பேராசிரியை மற்றும் மாணவிகள், முன்னாள் கால்நடைத்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நிர்வாகிகள், மேட்பர்வையாளர்கள், அட்வொகேட்ஸ் கீரெஷா பிரசாத், சஞ்சய், வடக்கன்குளம் கருணை இல்லம் நிர்வாகிகள், மரியாச்செல்வமணி, தாமஸ், மைக்கேல் ஜார்ஜ், கண்மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பத்மநாபபுரம் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:46:15 PM (IST)

வீட்டை உடைத்து 46 பவுன் நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது; நகைகள் மீட்பு!
திங்கள் 23, மார்ச் 2026 9:40:44 PM (IST)

மதுபோதையில் மயங்கிய கேட் கீப்பர்கள்: நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்!
திங்கள் 23, மார்ச் 2026 12:39:34 PM (IST)

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)

குமரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சனி 21, மார்ச் 2026 3:35:38 PM (IST)

தக்கலையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
வியாழன் 19, மார்ச் 2026 8:05:55 PM (IST)

