» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் மாட்டுப்பொங்கல் திருவிழா....!
வியாழன் 16, ஜனவரி 2025 4:13:09 PM (IST)

நாகர்கோவிலில், ஜீவகாருண்யா விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக, நேற்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.
அறக்கட்டளையின் நிறுவனர், ஷோபா தலைமையில், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாடுகளுக்கு திலகமிட்டு, பொங்கல் வைத்து கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம், பாண்டிய சிலம்ப அகடமி, ஆசான் தங்கபாண்டியன் தலைமையில், கிராமிய மற்றும் சிலம்பக் கலைக்குழு, கிராமிய சிலம்பாட்டம், வீர விளையாட்டுக்கள், நடனங்கள் போன்ற வீர சாகச நிகழ்ச்சிகள் நடத்தினர். மறைந்து வரும் சிவகங்கை மருதுபாண்டி சகோதரர்களின், தமிழர் வீர விளையாட்டான, வளறி தற்காப்பு விளையாட்டும் நடைபெற்றன.
அதன் நினைவாக தமிழர்களின் தற்காப்பு வளறி ஆயுதத்தை, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு எம் ஆர் காந்தி அவர்களுக்கும், தமிழ்நாடு நடசாரி சிலம்பாட்ட கழக தலைவர் ஜே. அர்னால்டு அரசு அவர்களுக்கும், பைரவி அறக்கட்டளை ஷோபா அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஐயப்பா மகளீர் கல்லூரி பேராசிரியை மற்றும் மாணவிகள், முன்னாள் கால்நடைத்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நிர்வாகிகள், மேட்பர்வையாளர்கள், அட்வொகேட்ஸ் கீரெஷா பிரசாத், சஞ்சய், வடக்கன்குளம் கருணை இல்லம் நிர்வாகிகள், மரியாச்செல்வமணி, தாமஸ், மைக்கேல் ஜார்ஜ், கண்மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:48:59 PM (IST)

நாகர்கோவிலில் பிப்.19ம் தேதி 6வது புத்தகத் திருவிழா தொடக்கம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:53:01 PM (IST)

மருத்துவ வசதிகளை மேம்படுத்த கோரி விவாதம்: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
வியாழன் 13, பிப்ரவரி 2025 11:34:34 AM (IST)

10 வயது சிறுமி பலாத்காரம்: சிறுவன் உள்பட 2 பேர் கைது
புதன் 12, பிப்ரவரி 2025 9:03:58 PM (IST)

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா தேரோட்டம் கோலாகலம்
புதன் 12, பிப்ரவரி 2025 4:57:36 PM (IST)

செண்பகராமன்புதூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
புதன் 12, பிப்ரவரி 2025 11:29:18 AM (IST)
