» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 30, நவம்பர் 2024 3:44:51 PM (IST)

தோவாளை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில் தோவாளை ஊராட்சி ஒன்றியம், செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட யோகீஸ்வரர் காலனியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ரூ.3.10 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பணிகளையும், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின்கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.
ஆய்வுகளில் செண்பகராமன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயா, சங்கரன் புஷ்ப ரதி, அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: குமரியில் 5,000 உணவகங்கள் மூடும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:36:32 PM (IST)

