» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மயிலாடி உழவர் சந்தையில் ஆட்சியர் ஆய்வு
வியாழன் 24, அக்டோபர் 2024 5:42:14 PM (IST)

மயிலாடி உழவர் சந்தையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- மயிலாடி உழவர் சந்தையினை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உழவர் சந்தையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை தாங்களே விற்பனை செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.
அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக விவசாயிகளுக்கு உழவர் சந்தை குறித்த விழிப்பிணர்வினை ஏற்படுத்தி அதிகளவு விவசாயிகள் உழவர் சந்தையினை பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் வியாபாரிகள் மற்றும் நுகர்வோரின் வருகையை அதிகரிக்க அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை விற்பனை செய்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தோட்டக்கலைத்துறை வாயிலாக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களில் மானிய விலையில் வழங்கும் காய்கறி விதைகள், பழமரங்கள் தொகுப்பு, தென்னங்கன்றுகள், மலர்செடிகள் உள்ளிட்டவைகளை உழவர் சந்தை கடைகளில் விற்பனை செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் சுயஉதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் கைவினைப்பொருட்கள், நறுமணப் பொருட்கள், தேன், உணவுப்பொருட்கள் உள்ளிட்டவைக உழவர் சந்தையில் விற்பனை செய்வதற்கு, கடைகளை ஒதுக்கீடு செய்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக நாகர்கோவில் எஸ்.எல்.பி மேல்நிலைப் பள்ளியினை நேரில் பார்வையிட்டதோடு, தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது என ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.
ஆய்வுகளில் உதவி செயற்பொறியாளர் முருகேசன், துணை இயக்குநர் (வேளாண் விற்பனை) கீதா, அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் புதிய பெட்டிகளுடன் முதல் பயணத்தை துவங்கியது
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:03:13 PM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் 1025 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணை
சனி 13, டிசம்பர் 2025 10:33:38 AM (IST)

குமரியில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35பேர் உள்ளனர்: ஆட்சியர் அழகுமீனா தகவல்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:50:25 PM (IST)


.gif)