» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மோதல் போக்கு: பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ இடமாற்றம்: டி.ஐ.ஜி. உத்தரவு
வியாழன் 17, அக்டோபர் 2024 10:01:57 AM (IST)
நாகர்கோவிலில் மோதல் போக்கு உருவான நிலையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சாந்தி. அதே காவல் நிலையத்தில் ஆஷா ஜெபகர் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையே பணி தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் 2 பேருக்குமிடையே மோதல் போக்கு உருவானது. இதைத் தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேரும் தனித்தனியாக மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவதனத்திடம் புகார் மனுவும் அளித்தனர். இந்த விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தான் ராஜினாமா செய்யப்போவதாக உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்.
அந்த கடிதத்தில், "நான் காவல் நிலையத்தில் இல்லாத நேரத்தில் வரும் புகார்தாரர்களிடம் புதிதாக வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை காட்டி இவர் தான் சப்-இன்ஸ்பெக்டர் என்று இன்ஸ்பெக்டர் கூறினார். கடந்த ஆகஸ்டு மாதம் சப்-இன்ஸ்பெக்டர் அறையில் உள்ள இருக்கையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அமா்ந்து பணியாற்றினார். இதுபற்றி இன்ஸ்பெக்டரிடம் கேட்டால் மருத்துவ விடுப்பில் செல்லுங்கள் என்று கூறினார். இதனால் என்னால் பணியாற்ற முடியவில்லை” என்று கூறப்பட்டு இருந்தது.
இதே போல இன்ஸ்பெக்டர் சாந்தி அளித்த புகார் மனுவில், "சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தனது பணியை ஒழுங்காக செய்யவில்லை. இன்ஸ்பெக்டருக்கு மரியாதை கொடுக்கவில்லை. பணியில் அலச்சியமாக உள்ளார்”் என்று கூறப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து 2 பேரின் புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவிட்டார். அதன்பேரில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கிடையே 2 பேரும் நாகர்கோவில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். அப்போது ஆயுதப்படையில் இருந்து குலசை தசரா விழா பாதுகாப்பு பணிக்காக 2 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில் இன்ஸ்பெக்டர் சாந்தி தென்காசி மாவட்டம் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் நெல்லை மாநகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நெல்லை சரக டி.ஐ.ஜி. மூர்த்தி பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தீவிரம்: இதுவரை ரூ.30.48 லட்சம் பறிமுதல்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:50:33 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: இதுவரை ரூ.28.58 லட்சம் பறிமுதல்!
வியாழன் 26, மார்ச் 2026 5:10:34 PM (IST)

137 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பாதுகாப்பு குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 26, மார்ச் 2026 12:48:58 PM (IST)

தேர்தல் நடத்தை விதிகளால் வணிகம் பாதிப்பு: போராட்டம் நடத்த வணிகர் சங்கம் முடிவு!
வியாழன் 26, மார்ச் 2026 12:09:02 PM (IST)

பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வாகன சோதனை : தேர்தல் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 26, மார்ச் 2026 12:00:39 PM (IST)

பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்!
புதன் 25, மார்ச் 2026 5:17:39 PM (IST)

