» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மோதல் போக்கு: பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ இடமாற்றம்: டி.ஐ.ஜி. உத்தரவு
வியாழன் 17, அக்டோபர் 2024 10:01:57 AM (IST)
நாகர்கோவிலில் மோதல் போக்கு உருவான நிலையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சாந்தி. அதே காவல் நிலையத்தில் ஆஷா ஜெபகர் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையே பணி தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் 2 பேருக்குமிடையே மோதல் போக்கு உருவானது. இதைத் தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேரும் தனித்தனியாக மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவதனத்திடம் புகார் மனுவும் அளித்தனர். இந்த விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தான் ராஜினாமா செய்யப்போவதாக உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்.
அந்த கடிதத்தில், "நான் காவல் நிலையத்தில் இல்லாத நேரத்தில் வரும் புகார்தாரர்களிடம் புதிதாக வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை காட்டி இவர் தான் சப்-இன்ஸ்பெக்டர் என்று இன்ஸ்பெக்டர் கூறினார். கடந்த ஆகஸ்டு மாதம் சப்-இன்ஸ்பெக்டர் அறையில் உள்ள இருக்கையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அமா்ந்து பணியாற்றினார். இதுபற்றி இன்ஸ்பெக்டரிடம் கேட்டால் மருத்துவ விடுப்பில் செல்லுங்கள் என்று கூறினார். இதனால் என்னால் பணியாற்ற முடியவில்லை” என்று கூறப்பட்டு இருந்தது.
இதே போல இன்ஸ்பெக்டர் சாந்தி அளித்த புகார் மனுவில், "சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தனது பணியை ஒழுங்காக செய்யவில்லை. இன்ஸ்பெக்டருக்கு மரியாதை கொடுக்கவில்லை. பணியில் அலச்சியமாக உள்ளார்”் என்று கூறப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து 2 பேரின் புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவிட்டார். அதன்பேரில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கிடையே 2 பேரும் நாகர்கோவில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். அப்போது ஆயுதப்படையில் இருந்து குலசை தசரா விழா பாதுகாப்பு பணிக்காக 2 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில் இன்ஸ்பெக்டர் சாந்தி தென்காசி மாவட்டம் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் நெல்லை மாநகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நெல்லை சரக டி.ஐ.ஜி. மூர்த்தி பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடிநீரின் குளோரினேஷன் அளவு : ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:50:06 PM (IST)

குமரி மாவட்ட முதல்வர் மருந்தக சேமிப்பு குடோனில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 23, அக்டோபர் 2025 11:06:33 AM (IST)

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் : காவல் துறை அழைப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 3:36:41 PM (IST)

தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:56:25 PM (IST)

இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
திங்கள் 20, அக்டோபர் 2025 9:46:32 AM (IST)

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)


.gif)