» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஓலா, ஊபர் டாக்சிக்கு தடை விதிக்க கோரி ஆர்ப்பாட்டம் - ஆட்டோ டிரைவர்கள் முடிவு!
புதன் 31, ஜூலை 2024 4:10:47 PM (IST)

ஓலா, ஊபர் போன்ற தனியார் டாக்சிகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆக.13ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் மத்திய மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும். அரசு வேலைவாய்ப்பில் ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுனர் மீது ஆன்லைன் பதிவு செய்யக்கூடிய வழக்கை கைவிட வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் நிதி ஒதுக்குவது போல் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுவதற்கு ஓய்வூதியம் 5 ஆயிரம் ஆக உயர்த்த வேண்டும். ஆட்டோ எப்சி கட்டணம் குறைக்க வேண்டும். பெண்கள் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வழங்கக்கூடிய ஒரு லட்ச ரூபாய் மானியத்தை ஆண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் வணங்க வேண்டும்.
ஆட்டோ தொழிலாளர்கள் விபத்து மரணம் ஏற்பட்ட ஐந்து லட்சம் நிதி வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய ஆட்டோ ஓட்டு உரிமை (பேட்ஜ்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களின் குழந்தைகளின் பள்ளி உயர்கல்வி மேற்படிப்புக்கு நிதி உதவி உயர்த்தி தர வேண்டும். எப்சி பெர்மிட் கட்டணத்தை குறைத்திட வேண்டும்.
ஓலா, ஊபர் போன்ற தனியார் நிறுவனங்களை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆக.13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி கோரி சங்கத்தின் சார்பாக மத்திய பாகம் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் மாரியப்பன், மணிவண்ணன், திருப்பதி வெங்கடேஷ், சக்திவேல், சுரேஷ், மந்திரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

ஊருக்குள் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:39:13 PM (IST)

அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 10:43:29 AM (IST)

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

ஆனந்த்Jul 31, 2024 - 04:48:03 PM | Posted IP 172.7*****