» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் : காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை!
செவ்வாய் 9, ஜூலை 2024 4:39:03 PM (IST)
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
மின்வாரியத்தில் காலியாக உள்ள 63,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்வாாியத்தை பல கூறுகளாக பிாித்து தனியாா் மயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் இன்று தூத்துக்குடியில் மின் வாரிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.