» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சீன எல்லை பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எப்போது வாய்திறப்பார்? - கனிமொழி எம்.பி. கேள்வி
திங்கள் 1, ஏப்ரல் 2024 9:53:59 PM (IST)
சீன எல்லை பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எப்போது வாய்திறப்பார்? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா நீண்டகாலத்திற்கு முன்பிருந்து உரிமை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு பெயர்களை மாற்றி 4வது பட்டியலை சீனா இன்று வெளியிட்டுள்ளது.அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்றும் சீனாவின் இத்தகைய நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் அருணாச்சல பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி சீனாவின் செயல்களை நிராகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு நம் நாட்டிற்குள் சீனாவை ஊடுருவ, ஒன்றிய பாஜக அரசு அனுமதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. தங்களின் ஆதாயத்திற்காக, நாட்டின் பாதுகாப்பை அடைமானம் வைத்துவிட்டதா பா.ஜ.க.?. தமிழ்நாட்டில் வாக்குக்காக அவதூறுகளைப் பரப்பும் பிரதமர் மோடி, சீன எல்லை பிரச்சினை குறித்து எப்போது வாய்திறப்பார்?. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
ஓட்டு போட்ட முட்டாள்Apr 2, 2024 - 08:22:16 AM | Posted IP 172.7*****
இலங்கை போரின்போது உங்கொப்பன் ஏன் ஏசி ல படுத்துட்டு நாடகம் போட்டாரு, குருமா , பாலு , போன்றவர்கள் கூட ராஜபக்ஷேவிடம் பரிசு வாங்கிட்டு தின்னுட்டு வந்துட்டு, பத்திரிகையில் சீன ராக்கெட் கொடி படம் அச்சடிச்ச குரூப் தான் கேடு கெட்ட திராவிட குரூப்.
கட்டுமரன்Apr 1, 2024 - 10:54:59 PM | Posted IP 162.1*****
இதை அவர் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். தேர்தல் பரப்புரையில் அல்ல.
மேலும் தொடரும் செய்திகள்

குடிநீரின் குளோரினேஷன் அளவு : ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:50:06 PM (IST)

குமரி மாவட்ட முதல்வர் மருந்தக சேமிப்பு குடோனில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 23, அக்டோபர் 2025 11:06:33 AM (IST)

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் : காவல் துறை அழைப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 3:36:41 PM (IST)

தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:56:25 PM (IST)

இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
திங்கள் 20, அக்டோபர் 2025 9:46:32 AM (IST)

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)


.gif)
IndianApr 2, 2024 - 09:54:07 AM | Posted IP 172.7*****