» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் மாட்ட தடை : காவல்துறை ஆணையருக்கு கோரிக்கை!
திங்கள் 12, பிப்ரவரி 2024 3:59:55 PM (IST)

நெல்லை மாநகரில் மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் மாட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி காவல் ஆணையர் பா.மூர்த்திக்கு எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் அனுப்பியுள்ள மனு : திருநெல்வேலி மாநகரில் சமீபகாலமாக மின் கம்பங்களில் மிகப் பெரிய விளம்பர பதாகைகள் தொங்க விடப்பட்டு வருகின்றது. இந்த விளம்பரங்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதால் விபத்துகள் ஏற்படுகின்றது.
ஆகவே தாங்கள் இவ்விஷயத்தில் நேரிடையாக தலையிட்டு விளம்பர பதாகைகளை மின் கம்பங்களில் தொங்க விடுவதை உடனடியாக தடை செய்ய அன்புடன் வேண்டுகிறோம். மேலும் நெல்லை வண்ணார் பேட்டையில் தினமும் இரவு நேரங்களில் ஆப்பிள் ட்ரீ ஹோட்டல் முன்பு ஆம்னி பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
ஆம்னி பஸ்கள் ஓரமாக நின்று பயணிகளை ஏற்றாததால் அந்த வழியாக வரும் மற்ற வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. ஏற்கனவே அந்த இடத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். ஆகவே இங்கு போக்குவரத்து காவலர்களை நியமிக்குமாறும், ஆம்னி பஸ்களை சற்று தள்ளி நிறுத்தவும் உத்திரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:12:56 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:53:00 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் நாளை ஹனுமான் ஜெயந்தி விழா
வியாழன் 18, டிசம்பர் 2025 3:42:39 PM (IST)

சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியில் எஸ்பி ஆய்வு : மேற்பார்வையாளர் கைது!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:06:04 PM (IST)

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 10:42:55 AM (IST)

திருவட்டார் வட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 4:59:03 PM (IST)


.gif)