» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பைக்கில் வந்து ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது!
திங்கள் 12, பிப்ரவரி 2024 11:56:56 AM (IST)
தூத்துக்குடியில் பைக்கில் வந்து ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மீளவிட்டான் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வேலு மனைவி ராமலட்சுமி (44). இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று சின்னக்கண்ணுபுரம் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது பைக்கில் வந்த 2பேர் ஒரு ஆட்டை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ராமலட்சுமி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆடுகளை திருடிய தாளமுத்துநகர் ராம்தாஸ் நகரைச் சேர்ந்த முத்து முகம்மது மகன் நாகூர்மீரான் (24), செட்டிகுமார் மகன் சரவணகுமார் (19) ஆகிய 2பேரை கைது செய்தனர். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)



G.MuthukrishnanFeb 12, 2024 - 02:59:16 PM | Posted IP 172.7*****