» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பைக்கில் வந்து ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது!
திங்கள் 12, பிப்ரவரி 2024 11:56:56 AM (IST)
தூத்துக்குடியில் பைக்கில் வந்து ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மீளவிட்டான் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வேலு மனைவி ராமலட்சுமி (44). இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று சின்னக்கண்ணுபுரம் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது பைக்கில் வந்த 2பேர் ஒரு ஆட்டை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ராமலட்சுமி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆடுகளை திருடிய தாளமுத்துநகர் ராம்தாஸ் நகரைச் சேர்ந்த முத்து முகம்மது மகன் நாகூர்மீரான் (24), செட்டிகுமார் மகன் சரவணகுமார் (19) ஆகிய 2பேரை கைது செய்தனர். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் புதிய பெட்டிகளுடன் முதல் பயணத்தை துவங்கியது
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:03:13 PM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் 1025 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணை
சனி 13, டிசம்பர் 2025 10:33:38 AM (IST)

குமரியில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35பேர் உள்ளனர்: ஆட்சியர் அழகுமீனா தகவல்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:50:25 PM (IST)


.gif)
G.MuthukrishnanFeb 12, 2024 - 02:59:16 PM | Posted IP 172.7*****