» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பைக்கில் வந்து ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது!
திங்கள் 12, பிப்ரவரி 2024 11:56:56 AM (IST)
தூத்துக்குடியில் பைக்கில் வந்து ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மீளவிட்டான் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வேலு மனைவி ராமலட்சுமி (44). இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று சின்னக்கண்ணுபுரம் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது பைக்கில் வந்த 2பேர் ஒரு ஆட்டை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ராமலட்சுமி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆடுகளை திருடிய தாளமுத்துநகர் ராம்தாஸ் நகரைச் சேர்ந்த முத்து முகம்மது மகன் நாகூர்மீரான் (24), செட்டிகுமார் மகன் சரவணகுமார் (19) ஆகிய 2பேரை கைது செய்தனர். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)


G.MuthukrishnanFeb 12, 2024 - 02:59:16 PM | Posted IP 172.7*****