» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
உளுந்து, பாசிப்பயறு விலை கடும் வீழ்ச்சி : விவசாயிகள் வேதனை
சனி 10, பிப்ரவரி 2024 8:17:43 AM (IST)

கழுகுமலை சுற்று வட்டார பகுதிகளில் உளுந்து, பாசிப்பயறு விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான குமாரபுரம், ராமநாதபுரம், துரைச்சாமிபுரம், வெங்கடேஸ்வரபுரம், வேலாயுதபுரம், காலங்கரைபட்டி, சங்கரலிங்கபுரம், வானரமுட்டி உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம் பயிரிட்டனர். பெரும்பாலும் இப்பகுதி விவசாய நிலங்கள் வானம்பார்த்த பூமி என்பதால் ஆண்டுதோறும் பெய்யும் பருவ மழையை நம்பித்தான் விவசாய தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இந்த ஆண்டு பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில் இருந்தபோது கடந்த மாதம் பெரும் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து பலத்த சேதமடைந்தது. இதை கண்ட விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
தற்போது பயிரிடப்பட்ட உளுந்து பாசிப்பயறு நல்ல மகசூலை தரும் என்ற நிலையில் இருந்தபோது கடந்த மாதம் பெய்த மழைக்கு ஏராளமான செடிகள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. எஞ்சியுள்ள உளுந்து பாசிப்பயறு செடிகள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் இருந்தபோது கடந்த வாரம் இப்பகுதியில் பெய்து வந்த மழை காரணமாக அறுவடை செய்ய முடியாத நிலை இருந்தது. இதனால் செடிகள் தண்ணீரால் பாதிக்கப்பட்டது.
தற்போது கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மழை இல்லாததால் விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு செடிகளை அறுவடை செய்து அவற்றை விற்பனைக்காக மொத்த கமிஷன் கடைக்கு கொண்டு செல்கின்றனர். தற்போது சந்தை கடைகளில் உளுந்து, பாசிப்பயறு குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரம் விலையில் வாங்கப்படுகிறது. இவை விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத விலையாகும். இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "கடந்த வாரம் வரை பெய்த தொடர் மழையால் உளுந்து, பாசிப்பயறு வகைகளின் தரம் சற்று குறைந்து காணப்படுவதால் சந்தைகளில் குறைவான விலையே நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகள் மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுகின்றனர்.
சில பகுதிகளில் தரமான உளுந்து, பாசிப்பயறு வகைகள் சந்தைகளில் குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரம் வரை வாங்கப்படுவதாக சந்தை வியாபாரிகள் கூறுகின்றனர். எனவே அரசு சரியான விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)


கர்ணன்Feb 12, 2024 - 07:46:32 AM | Posted IP 172.7*****