» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில்-திருவனந்தபுரம் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்
வெள்ளி 9, பிப்ரவரி 2024 10:48:24 AM (IST)
நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "நாகர்கோவிலில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும் முன்புதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-06428) மார்ச் 1-ந் தேதி முதல் கொச்சுவேலி வரை இயக்கப்படும்.
அதே போல, திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் முன்புதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (06433) மார்ச் 2-ந் தேதி முதல் கொச்சிவேலியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.