» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நோபல் பரிசு பெற்ற இந்தியரின் நினைவாக மகனுக்கு சேகர் என்று பெயர் சூட்டிய எலான் மஸ்க்
புதன் 3, டிசம்பர் 2025 8:25:48 AM (IST)

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளங்களிலும் பரபரப்பாக இயங்குகிறார். எனவே லட்சக்கணக்கானோர் அவரை பின்தொடர்கின்றனர்.
மேலும் தன்னை பின்தொடர்பவர்களுடன் நேரலையில் அவர் உரையாடும்போது வேடிக்கையான கருத்துகளை தெரிவிப்பார். இந்த கருத்துகள் சமூகவலைதளங்களில் வைரலாவதும் உண்டு. இந்தநிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் எலான் மஸ்க் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தனது தனிப்பட்ட குடும்ப விவரங்களை பகிர்ந்த அவர் தனது மனைவி ஷிவான் சிலிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், தனது மகன்களில் ஒருவருக்கு சேகர் என பெயர் சூட்டியிருப்பதாகவும் கூறியிருந்தார். இந்திய-அமெரிக்க இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகரின் நினைவாக இந்த பெயரை தாங்கள் சூட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரானுக்கு எதிராகத் திரளும் ஐரோப்பிய நாடுகள்: பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி கூட்டறிக்கை
திங்கள் 2, மார்ச் 2026 5:41:51 PM (IST)

மத்திய கிழக்கில் போர் பதற்றம் எதிரொலி: துபாயின் 2 சர்வதேச விமான நிலையங்களும் மூடல்!
திங்கள் 2, மார்ச் 2026 10:20:21 AM (IST)

அமெரிக்கா, இஸ்ரேலை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்: ஈரான் தூதரகம்
திங்கள் 2, மார்ச் 2026 10:12:42 AM (IST)

கரன்சி நோட்டுகளை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது - 15 பேர் பலி
சனி 28, பிப்ரவரி 2026 5:03:54 PM (IST)

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டுத் தாக்குதல் : மத்திய கிழக்கில் போர் மூண்டது!
சனி 28, பிப்ரவரி 2026 4:51:57 PM (IST)

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் பதற்றம்: வான்வழித் தாக்குதலில் 130-க்கும் மேற்பட்டோர் பலி!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 4:50:48 PM (IST)

