» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நேபாளத்தில் தொடரும் வன்முறை: வணிக வளாகங்களை கொள்ளையடிக்கும் பொதுமக்கள்!
புதன் 10, செப்டம்பர் 2025 5:25:44 PM (IST)
நேபாளத்தில் வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து பொதுமக்கள் கைக்கு கிடைத்த பொருட்களை மொத்தமாக அள்ளிச்சென்ற காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நேபாளத்தில் பிரதமர் கேபி சர்மா ஒலி தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் உள்பட 26 சமூக வலைதளங்களுக்கு பிரதமர் கேபி சர்மா ஒலி தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையானது. இதனால் சமூக வலைதளங்கள் மீதான தடை ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும் போராட்டக்காரர்கள் பின்வாங்கவில்லை. கேபி சர்மா ஒலியின் ஆட்சி மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. இதனை கண்டித்து அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் கேபி சர்மா ஒலி ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதுமட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அரசியல்வாதிகளின் வீடு, நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் தீவைத்து எரிக்கப்பட்டது. இதனால் நேற்று வன்முறை கட்டுக்கடங்காமல் நாடு முழுவதும் பரவியது. இதையடுத்து கேபி சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் வன்முறை இன்னும் தொடர்கிறது. ராணுவம் தற்போது நாட்டை கட்டுப்பாட்டில் எடுத்து வன்முறையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே தான் நேபாள வன்முறை தொடர்பான வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. நாடாளுமன்ற கட்டத்துக்குள் நுழைந்து போராட்டக்காரர்கள் சூறையாடியது, தீவைத்தது, அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை விரட்டி விரட்டி தாக்கியது என பல்வேறு வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
அந்த வகையில் தற்போது இன்னொரு வீடியோ வெளியாகி உள்ளது. வன்முறையை பயன்படுத்திய சிலர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, மிக்சி, கிரைண்டர், ஆடைகள், உணவு பொருட்கள் உள்பட பல விலை உயர்ந்த பொருட்களை அள்ளி சென்றனர்.
சில பெண்கள் பெரிய பெரிய பாக்ஸ்களை தலையில் சுமந்து தூக்கி சென்றனர். சூப்பர் மார்க்கெட், மால், ஷோரூம் உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் இந்த பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரவி வருகிறது.
அதேபோல் சில இடங்களில் ஜவுளி கடைகள் பூட்டுப்போட்டு பூட்டப்பட்டு இருந்தது. ஆனாலும் பொதுமக்கள் விடவில்லை. ஜவுளிக்கடைகளின் பூட்டை உடைத்தும், கண்ணாடி ஜன்னல்களை உடைத்தும் உள்ளே சென்று ஆடைகளை அள்ளி சென்றனர். இந்த வீடியோவும் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துபாய் கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்து: பைலட் உயிரிழப்பு - விசாரணைக்கு உத்தரவு!
சனி 22, நவம்பர் 2025 11:48:55 AM (IST)

தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்கில் ஒலித்த தமிழ் பாடல்: கைத்தட்டி ரசித்த பிரதமர் மோடி
சனி 22, நவம்பர் 2025 11:21:11 AM (IST)

இந்தியாவுக்கு ரூ.823 கோடி ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு
வெள்ளி 21, நவம்பர் 2025 11:02:16 AM (IST)

ஒரே இரவில் 470 ட்ரோன், 48 ஏவுகணை வீசி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: ஜெலன்ஸ்கி கண்டனம்
வியாழன் 20, நவம்பர் 2025 12:04:16 PM (IST)

ரஷ்யாவுக்கு நிதியளிக்கும் சீனா, இந்தியா, பிரேசில் மீது கடும் நடவடிக்கை : டிரம்ப் மிரட்டல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:54:26 AM (IST)

வங்கதேச வன்முறை வழக்கில் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திங்கள் 17, நவம்பர் 2025 4:04:28 PM (IST)


.gif)