» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 20 ஆயிரம் பேர் கைது
திங்கள் 28, அக்டோபர் 2024 10:42:42 AM (IST)

சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 20 ஆயிரம் பேர், மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கு அகதிகளாக குடியேறுகின்றனர். அவ்வாறு செல்லும்போது பெரும்பாலும் அவர்கள் சட்ட விரோத பயணத்தையே மேற்கொள்கின்றனர். எனவே சவுதி அரேபியாவுக்குள் சட்ட விரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் எல்லை பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கிறது.
அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சட்ட விரோதமாக குடியேறியதாக 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்க இலங்கை அனுமதி மறுப்பு: அதிபர் திஸாநாயக்க தகவல்
வெள்ளி 20, மார்ச் 2026 4:07:14 PM (IST)

ஈரான் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்: ட்ரம்ப் - நெதன்யாகு இடையே கருத்து முரண்பாடு!
வெள்ளி 20, மார்ச் 2026 11:45:05 AM (IST)

வடகொரியத் தேர்தலில் கிம் ஜாங் உன் வெற்றி: 0.07% எதிர்ப்பு வாக்குகளால் பரபரப்பு!
புதன் 18, மார்ச் 2026 4:46:37 PM (IST)

ஈரான் பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டாரா? இஸ்ரேல் அறிவிப்பு!
செவ்வாய் 17, மார்ச் 2026 4:48:46 PM (IST)

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் உயிரிழந்ததாகத் தலிபான் அரசு அறிவிப்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 10:33:45 AM (IST)

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காபி குடிப்பது போன்ற வீடியோ போலி: க்ரூக் ஏஐ தகவல்!
திங்கள் 16, மார்ச் 2026 5:53:38 PM (IST)

