» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 20 ஆயிரம் பேர் கைது
திங்கள் 28, அக்டோபர் 2024 10:42:42 AM (IST)

சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 20 ஆயிரம் பேர், மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கு அகதிகளாக குடியேறுகின்றனர். அவ்வாறு செல்லும்போது பெரும்பாலும் அவர்கள் சட்ட விரோத பயணத்தையே மேற்கொள்கின்றனர். எனவே சவுதி அரேபியாவுக்குள் சட்ட விரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் எல்லை பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கிறது.
அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சட்ட விரோதமாக குடியேறியதாக 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் தான் நிற்கும் : உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி!
வியாழன் 18, ஜூன் 2026 11:18:03 AM (IST)

உலக அளவில் நிம்மதி: அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்! எண்ணெய் விநியோகம் சீராகும்!
திங்கள் 15, ஜூன் 2026 3:52:24 PM (IST)

அமெரிக்கா - ஈரான் இடையே சமரச தூதராகப் பாகிஸ்தான் வெற்றி: ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 1:13:05 PM (IST)

இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலைத் திசைதிருப்ப டிரம்ப் முயற்சி: ஈரான் பகிரங்கக் குற்றச்சாட்டு!
சனி 13, ஜூன் 2026 12:02:06 PM (IST)

இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு எந்தவிதத் தடையும் இல்லை: நேபாள அரசு விளக்கம்!
வெள்ளி 12, ஜூன் 2026 10:52:52 AM (IST)

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான் ராணுவம்: மீறும் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு..!
வியாழன் 11, ஜூன் 2026 5:27:20 PM (IST)


