» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் பழங்குடியின குழுக்கள் மோதல்: 42 பேர் பலி; 170 பேர் படுகாயம்!
செவ்வாய் 30, ஜூலை 2024 11:11:33 AM (IST)

பாகிஸ்தானில் பழங்குடியினர் குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 170 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் உப்பர் குர்ரம் நகரில் இரு பழங்குடியின குழுக்கள் உள்ளனர். நில உரிமை தொடர்பாக இந்த குழுவினர் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது. இதனால் இரு தரப்பினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுகின்றனர்.அதன்படி கடந்த வாரம் புசேரா கிராமத்தில் உள்ள பழங்குடி குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
பின்னர் இந்த கலவரம் காட்டுத்தீ போல அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவியது. இதனையடுத்து பதுங்கு குழிகள் அமைத்துக்கொண்டு இரு தரப்பினரும் மாறிமாறி தாக்கினர். 5 நாட்களுக்கு பிறகு இந்த மோதல் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் மீண்டும் கலவரம் தொடங்கியது. தீவிரம் அடைந்த இ்ந்த கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், வெடிகுண்டுகளை வீசியும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதனால் இருதரப்பிலும் இதுவரை 42 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் 170 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
மேலும் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் கலவரம் பரவுவதால் அங்கு போர்ப்பதற்றம் நிலவுகிறது. எனவே கலவரத்தை ஒடுக்க அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அதேசமயம் பேச்சுவார்த்தை மூலம் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரவும் அதிகாரிகள் முயன்று வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவில் மாட்டிறைச்சி, காபி, பழங்களுக்கு வரி குறைப்பு: அதிபர் டிரம்ப் உத்தரவு!
ஞாயிறு 16, நவம்பர் 2025 1:37:26 PM (IST)

ஈரான் ஏவுகணை திட்டத்திற்கு உதவி: இந்திய நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை!!
சனி 15, நவம்பர் 2025 12:52:24 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கு: நவம்பர் 17ல் தீர்ப்பு
வெள்ளி 14, நவம்பர் 2025 12:28:11 PM (IST)

அமெரிக்காவில் நிதி முடக்கம் முடிவுக்கு வந்தது : மசோதாவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்!
வியாழன் 13, நவம்பர் 2025 12:20:27 PM (IST)

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!
வியாழன் 13, நவம்பர் 2025 10:16:06 AM (IST)

பாகிஸ்தானில் நீதிமன்றம் அருகே குண்டு வெடிப்பு: 12 பேர் உயிரிழப்பு
செவ்வாய் 11, நவம்பர் 2025 5:45:34 PM (IST)


.gif)