» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து 45 பேர் பலி: ஈஸ்டர் கொண்டாட சென்றபோது சோகம்!!!
சனி 30, மார்ச் 2024 9:04:18 AM (IST)

தென் ஆப்பிரிக்காவில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட சென்றபோது பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணம் மோரியா நகரில் பிரசித்தி பெற்ற ஒரு தேவாலயம் உள்ளது. விஷேச நாட்களில் இங்கு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வருவது வழக்கம். கொரோனா காலத்துக்கு பிறகு மீண்டும் அங்கு ஈஸ்டர் கொண்டாட்டம் இந்த ஆண்டு தொடங்கியது. எனவே அண்டை நாடான போட்ஸ்வானாவில் இருந்தும் பஸ் மூலம் மோரியாவில் உள்ள தேவாலயத்துக்கு கிறிஸ்தவர்கள் புறப்பட்டனர்.
அந்த பஸ்சில் சுமார் 50 பேர் பயணம் செய்தனர். இந்தநிலையில் மொகோபனே-மார்கென் இடையே மாமட்லகலா நகரில் உள்ள பாலம் வழியாக பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி பஸ் தீப்பிடித்தது. பின்னர் சுமார் 165 அடி ஆழ பள்ளத்தில் கீழே விழுந்து பஸ் நொறுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அந்த பஸ் தீப்பிடித்து எலும்புக்கூடு போல காட்சி அளித்தது.
மேலும் டிரைவர் உள்பட 45 பயணிகள் உடல் கருகி பலியாகினர். எனினும் அதிர்ஷ்டவசமாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். மீட்பு படையினர் சிறுமியை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே விபத்து நடந்த பகுதிக்கு போக்குவரத்து துறை மந்திரி சிண்டிசிவே சிக்குங்கா நேரில் சென்றார். அப்போது இந்த விபத்தில் பலியானவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)


.gif)