» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பீகாரில் முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

சனி 25, ஏப்ரல் 2026 10:49:21 AM (IST)



பீகார் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான புதிய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. 

என்டிஏ மாநிலங்களவை எம்.பியாக தேர்வான ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் கடந்த ஏப்ரல் 14 அன்று பீகார் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணை முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார். பீகார் மாநிலத்தில் பொறுப்பேற்ற முதல் பாஜக முதல்வர் என்ற பெருமையை பெற்றார்.

இதனிடையே அவர் தலைமையிலான புதிய அரசு மீது நேற்று பீகார் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எளிதாக வெற்றி பெற்றது. இதன் மூலம் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒற்றுமை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாம்ராட் சவுத்ரி முதலில் சமதா கட்சியிலும், பின்னர் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளிலும் இருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு சாம்ராட் சவுத்ரி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory