» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராஜஸ்தான் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து : பிரதமரின் திறப்பு விழா ஒத்தி வைப்பு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:27:48 AM (IST)

ராஜஸ்தானில் நாளை பிரதமர் திறந்து வைக்க உள்ள நிலையில், சுத்திகரிப்பு ஆலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்கான திட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தானின் பலூத்ரா நகரில் பச்பத்ரா பகுதியில் இந்தியாவின் முதல் பசுமைவெளி ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு ஆலை ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தான் அரசுடன் இணைந்து, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் இதனை செயல்படுத்த உள்ளது. பிரதமர் மோடி இதனை நாளை துவக்கி வைக்க இருந்த நிலையில், திடீரென தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை கிளம்பியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த கரும்புகை வான் வரை பரவியது. எனினும், அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, அதனை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இறக்குமதியை சார்ந்திராமல் உள்நாட்டு உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆலை அமைக்கப்பட்டு உள்ளது. இது, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், இந்த சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்கான திட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தலையீடு : மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:50:06 PM (IST)

ஆட்டோ டெபிட் வரம்பு ரூ.15 ஆயிரமாக உயர்வு : இனி ஓடிபி தேவையில்லை - ஆர்பிஐ அறிவிப்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 5:51:36 PM (IST)

திருச்சூர் வெடி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு : விசாரணை ஆணையம் அமைத்தது கேரள அரசு!
புதன் 22, ஏப்ரல் 2026 5:25:16 PM (IST)

பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது: பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் பிரதமர் அஞ்சலி
புதன் 22, ஏப்ரல் 2026 12:50:25 PM (IST)

டெல்லியில் போலி ஈனோ, நெஸ்கஃபே தயாரித்த கும்பல் கைது: 1.5 லட்சம் பாக்கெட்டுகள் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:15:54 PM (IST)

தேங்கி நிற்கும் பயங்கரவாத வழக்குகள்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் நடவடிக்கை
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:33:31 PM (IST)

