» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெண்ணை எரித்துக் கொன்று நகையை பறித்த போலீஸ்காரர் மனைவி: பரபரப்பு தகவல்கள்
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:48:43 AM (IST)
கேரளத்தில் பங்கு வர்த்தக நஷ்டத்தை சமாளிக்க பெண்ணை எரித்துக் கொன்று நகையை பறித்த போலீஸ்காரரின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே கீழ் வாய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் லதா குமாரி (61). இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய வீட்டின் அருகே உள்ள ஒரு குடியிருப்பில் காவலர் குடும்பமும் வசித்து வந்தது. அதாவது போலீஸ்காரரின் மனைவி சுமையா (46), பக்கத்து வீடு என்ற முறையில் லதா குமாரியிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
பிறகு அவரிடம் சென்று அடிக்கடி பணம் கேட்டுள்ளார். பணம் இல்லையென்றதும், உங்களுடைய நகையை அடகு வைத்து தாருங்கள் என சுமையா கூறியுள்ளார். இந்த மிரட்டல் தொனியிலான பேச்சு லதாகுமாரிக்கு பிடிக்கவில்லை. இனி இதுபோன்று பணம் கேட்டு நச்சரிக்காதீர்கள் என மறுத்து விட்டார். இது சுமையாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
சம்பவத்தன்று லதா குமாரியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சுமையா, அங்கு அவரை கட்டிப் போட்டார். பிறகு சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்து அமுக்கினார். அதோடு நின்று விடாமல் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகளை பறித்தார்.
நகையுடன் ஓடி விட்டால், கொள்ளையடித்த விவரம் போலீசாருக்கு தெரியவரும். எனவே லதாகுமாரியை உயிரோடு எரித்துக் கொன்று விடலாம் என்ற கொடூர முடிவுக்கு வந்தார். அதன்படி அவரை எரித்து விட்டு தப்பிச் சென்றார். ஆனால் லதாகுமாரி பலத்த காயங்களுடன் உயிருக்காக போராடினார்.
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சமயத்தில் லதாகுமாரி, பத்தனம்திட்டா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சுமையா தீ வைத்து எரித்ததை தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுமையாவை கைது செய்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க சுமையா, லதாகுமாரியின் நகைக்கு ஆசைப்பட்டு அவரை எரித்ததை போலீசாரிடம் ஒப்புக் கொண்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி லதாகுமாரி நேற்று பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரூர் சம்பவத்தில் அரசு வேலை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:41:00 PM (IST)

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடக்கம்: ரூ.175 கோடி வரிப்பணம் வீண்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:50:45 AM (IST)

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)


