» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விசாரணைக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : நீதிபதி பணி இடைநீக்கம்
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 4:55:00 PM (IST)
கேரளாவில், விவாகரத்து வழக்கு விசாரணைக்காக வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நீதிபதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட குடும்ப நல நீதிபதியாக இருந்தவர் உதயகுமார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் விவாகரத்து வழக்கு விசாரணைக்காக வந்த ஒரு இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண் கொல்லம் மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்தார். அந்த புகார் கேரள உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த புகார் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், குடும்ப நல நீதிபதி உதயகுமாரை கொல்லம் மாவட்ட வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக உயர்நீதிமன்ற பதிவாளர் விசாரணை நடத்தி அறிக்கையாக தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி அடங்கிய நீதிபதிகள் குழுவினர் குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி உதயகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் கவிதா!
புதன் 3, செப்டம்பர் 2025 5:25:09 PM (IST)

சிங்கப்பூர் பிரதமர் இந்தியா வருகை: மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி!
புதன் 3, செப்டம்பர் 2025 5:20:16 PM (IST)

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து மகள் கவிதாவை நீக்கிய சந்திரசேகர் ராவ்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:02:50 PM (IST)

ஆசிரியர்களுக்கு டெட் தகுதி தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:53:18 AM (IST)

செப்டம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 8:30:06 PM (IST)

வீடுகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமில்லை: வர்த்தக சிலிண்டர் விலை குறைந்தது!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:24:32 PM (IST)
