» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 3 பேருக்கு தூக்குத்தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 11, ஜூலை 2025 8:23:20 AM (IST)

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வழக்கில் 3 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேற்குவங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் ராஜ்குஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்த சிறுமி காணாமல் போனதாக ராஜ்குஞ்ச் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பக்கத்து கிராமத்தை சேர்ந்த ரகுமான் அலி, ஜமிருல், தமிருல் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் அந்த சிறுமியை கடத்திச் சென்று, அந்த பகுதியில் உள்ள ஓட்டல்களில் அடைத்து வைத்து பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததும், பின்னர் அந்த சிறுமியை கழுத்தை நெரித்து கொன்று, உடலை கழிவுநீர் தொட்டியில் வீசியதும் தெரிய வந்தது.

இதையடுத்து ரகுமான் அலி, ஜமிருல், தமிருல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஜல்பைகுரியில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி ரிந்து சுர் வழக்கை விசாரித்து ரகுமான் அலி உள்பட 3 பேரையும் நேற்று முன்தினம் குற்றவாளிகள் என்று அறிவித்தார்.

அவர்களுக்கான தண்டனை நேற்று வழங்கப்பட்டது. இதற்காக அவர்கள் 3 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ரிந்து சுர் தனது இருக்கையில் வந்து அமர்ந்ததும் தீர்ப்பை வாசித்தார். அப்போது அவர், இந்த குற்றம் அரிதிலும் அரிதானது. எனவே குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory