» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விமான விபத்தில் முன்னாள் முதல்வர் உயிரிழப்பு: குடும்பத்தினரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்!
வெள்ளி 13, ஜூன் 2025 3:53:11 PM (IST)

விமான விபத்தில் உயிரிழந்த பா.ஜ.க. மூத்த தலைவர், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். விமானம் மதியம் 1.39 மணியளவில் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ மாணவர் விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். மருத்துவ மாணவர் விடுதியில் 7 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணம் செய்த ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார்.
இந்த விமானத்தில் பா.ஜ.க. மூத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் உயிரிழந்தார். அவர் லண்டனில் உள்ள தனது மனைவியை அழைத்து வர விமானத்தில் சென்றுள்ளார்.ஆனால், விமான விபத்தில் விஜய் ரூபானி உயிரிழந்தார். இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 76,181 மாணவ, மாணவிகள் தேர்ச்சி!
சனி 14, ஜூன் 2025 3:44:23 PM (IST)

மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதிய விபத்து : உயிரிழப்பு 274 ஆக உயர்வு
சனி 14, ஜூன் 2025 12:47:37 PM (IST)

மனைவியின் அஸ்தியைக் கரைக்க வந்தவர் விமான விபத்தில் பலி: லண்டனில் குழந்தைகள் தவிப்பு!
வெள்ளி 13, ஜூன் 2025 3:29:14 PM (IST)

விமான விபத்தில் இருந்து தப்பியது எப்படி? உயிர் பிழைத்த ஒரே பயணி பேட்டி!
வெள்ளி 13, ஜூன் 2025 3:16:36 PM (IST)

விமான விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மோடி, அமித் ஷா பதவி விலக வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
வெள்ளி 13, ஜூன் 2025 11:00:47 AM (IST)

ஆமதாபாத் விமான விபத்து: மீட்பு பணிகளை பிரதமர் மோடி ஆய்வு!
வெள்ளி 13, ஜூன் 2025 10:17:24 AM (IST)
