» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்!
சனி 10, மே 2025 3:47:49 PM (IST)

காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் ஒமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் நடத்திவரும் தாக்குதலை முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதோடு, பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற அரசின் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் எஸ்.ராஜ்குமார் தப்பா பங்கேற்ற நிலையில், ரஜௌரியில் பாகிஸ்தான் அத்துமீறி இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் அவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் நிர்வாக பணிகளில் பொறுப்புமிக்க ஒரு அரசு அதிகாரியை நாங்கள் இழந்துவிட்டோம். நேற்று மாவட்டம் முழுவதும் துணை முதல்வருடன் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். மேலும், எனது தலைமையில் நடைபெற்ற ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார்.
இந்தநிலையில் ரஜௌரி நகரத்தை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அதிகாரி ராஜ் குமார் தாப்பா வீடு தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டுள்ளார். அவரது உயிரிழப்பால் தனக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் வலுவான பதிலடி கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி
ஞாயிறு 11, மே 2025 9:29:29 PM (IST)

குடியரசுத் தலைவர் முர்முவின் சபரிமலை பயணம் ரத்து: பொது தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி!!
சனி 10, மே 2025 4:56:04 PM (IST)

எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் முயற்சிகள் முறியடிப்பு: இந்திய ராணுவம் அதிரடி
சனி 10, மே 2025 11:18:54 AM (IST)

முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை!
சனி 10, மே 2025 8:47:45 AM (IST)

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிப்பு : உமர் அப்துல்லா
வெள்ளி 9, மே 2025 5:52:30 PM (IST)

பாகிஸ்தானிற்கு நிதி வழங்குவதில் ஆழமான யோசனை தேவை : ஐஎம்எஃப்-க்கு இந்தியா வலியுறுத்தல்!
வெள்ளி 9, மே 2025 3:36:32 PM (IST)
