» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காருக்குள் விளையாடிய 4 குழந்தைகள் பலி: குஜராத்தில் பரிதாபம்!
செவ்வாய் 5, நவம்பர் 2024 10:50:51 AM (IST)
குஜராத் மாநிலம் அம்ரேலியில் கார் கதவுகள் தானாகவே பூட்டிக் கொண்டதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் தார் பகுதியை சேர்ந்த விவசாய தொழிலாளி ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா கிராமத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். கடந்த 2-ந்தேதி காலை அவர், தனது மனைவி மற்றும் சில தொழிலாளர்களுடன் விவசாய வேலைக்காக காலையிலேயே சென்று விட்டார். அவர்களை நிலத்தின் உரிமையாளரே அழைத்து சென்றார்.
நில உரிமையாளரின் வீட்டு அருகே அந்த தொழிலாளியின் 4 குழந்தைகள் உள்பட 7 குழந்தைகள் அங்கு விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நின்ற காருக்குள், தொழிலாளியின் 4 குழந்தைகளும் ஏறி விளையாடினர். கார் கதவுகள் தானாகவே பூட்டிக்கொண்டதால், குழந்தைகளால் கதவை மீண்டும் திறக்கமுடியவில்லை.
நீண்ட நேரம் பூட்டிய காருக்குள் இருந்த 4 குழந்தைகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த பகுதியில் யாரும் இல்லாததால் நடந்த விபரீதம் பற்றி யாருக்கும் தெரியாமல் போயிற்று. சிறிது நேரத்தில் குழந்தைகள் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய தொழிலாளி தனது குழந்தைகளை தேடியபோது அவர்கள் காருக்குள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் கார் கதவை உடைத்து குழந்தைகளின் உடல்களை மீட்டனர். பலியான 4 குழந்தைகளும் 2 முதல் 7 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த சம்பவம் குறித்து அம்ரேலி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்த முடிவா? மத்திய அரசு விளக்கம் - ராகுல் விமர்சனம்!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:37:12 PM (IST)

டெல்லியில் பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதன் 15, அக்டோபர் 2025 5:05:42 PM (IST)

அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை கட்டியெழுப்புவோம்: பிரதமர் மோடி
புதன் 15, அக்டோபர் 2025 11:05:01 AM (IST)

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற கேள்வி
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:38:15 PM (IST)

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை எதிரொலி: டிஜிபிக்கு கட்டாய விடுப்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:17:00 PM (IST)

பிரதமர் மோடியுடன் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:40:03 PM (IST)
