» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் : மெளனம் கலைத்த தேவகவுடா கருத்து!
சனி 18, மே 2024 4:47:28 PM (IST)

பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என, அவரது தாத்தாவும், மஜத தலைவருமான தேவகவுடா கூறியுள்ளார்.
மஜத தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (33) மீதான ஆபாச வீடியோ வழக்கை மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேவகவுடா எந்த கருத்தும் கூறாமல் மவுனமாக இருந்தார்.
இந்நிலையில், தற்போது முதல் முறையாக இந்த விவகாரத்தில் மவுனம் கலைத்த தேவகவுடா நிருபர்களிடம் கூறியதாவது: பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், அது குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை. அவர் வெளிநாடு சென்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கட்சி சார்பாகவும், குடும்பம் சார்பாகவும் குமாரசாமி பேசியுள்ளார். சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பது மாநில அரசின் கடமை.
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பலருக்கு தொடர்பு உள்ளது. அவர்களின் பெயரை கூற விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என குமாரசாமி கூறியுள்ளார்.
குற்றவாளி எனும் போது பிரஜ்வல் மீது நடவடிக்கை எடுப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும், அவர் மீதான வழக்கு எப்படி பதியப்பட்டது என்பது குறித்தும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமரின் தீபாவளி பரிசு மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்
சனி 18, அக்டோபர் 2025 5:44:44 PM (IST)

குஜராத்தில் சாலை உட்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.7,737 கோடி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு
சனி 18, அக்டோபர் 2025 5:40:55 PM (IST)

குஜராத்தில் பூபேந்திர படேல் அமைச்சரவை பதவியேற்பு: ஜடேஜாவின் மனைவி அமைச்சரானார்
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:21:52 PM (IST)

தமிழக ஆளுநருக்கு எதிரான மனுக்கள் விசாரணை விசாரணை எப்போது? உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 12:33:12 PM (IST)

ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்த முடிவா? மத்திய அரசு விளக்கம் - ராகுல் விமர்சனம்!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:37:12 PM (IST)

டெல்லியில் பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதன் 15, அக்டோபர் 2025 5:05:42 PM (IST)
