» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சுற்றுலா பேருந்து மீது 2 லாரிகள் மோதி கோர விபத்து - 6 பேர் பலி!
சனி 10, பிப்ரவரி 2024 10:29:00 AM (IST)
நெல்லூர் அருகே 2 லாரிகள், சுற்றுலா பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆந்திரம் மாநிலம், நெல்லூர் மாவட்டம் முசுனூர் சுங்கச்சாவடி அருகே இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தி நோக்கி எருதுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரியும், பின்னால் இரும்பு ஏற்றிச் சென்ற மற்றுமொரு லாரியும் சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், இரும்பு ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசையில் வந்த தனியார் சுற்றுலாப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலாப் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மேலும் 2 பேர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் இறந்தனர். மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்துக்குள்ளான சுற்றுலாப் பேருந்து சென்னை வடபழனியில் இருந்து நேற்று நள்ளிரவில் ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், நெல்லூர் அருகே சென்ற பஸ் இன்று அதிகாலை லாரியுடன் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலவச அறிவிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததா? - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
வியாழன் 19, பிப்ரவரி 2026 3:32:40 PM (IST)

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை? மத்திய அரசு ஆலோசனை
வியாழன் 19, பிப்ரவரி 2026 7:58:56 AM (IST)

இம்ரான் கானை பாதுகாப்பது பாகிஸ்தான் அரசின் கடமை : கங்குலி ஆதரவு
புதன் 18, பிப்ரவரி 2026 5:36:45 PM (IST)

டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் குளறுபடி: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிரங்க மன்னிப்பு!
புதன் 18, பிப்ரவரி 2026 11:39:15 AM (IST)

ஆபத்தான முறையில் 'ரீல்ஸ்' வீடியோ: ஓடும் வாகனங்களின் கதவுகளைத் திறந்த வாலிபர் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 10:51:08 AM (IST)

டெல்லியில் ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:18:58 PM (IST)

