» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சமூக வலைதளங்களில் பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக கருத்து: யூடியூபர் கைது!
சனி 4, அக்டோபர் 2025 4:10:41 PM (IST)
சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக முகத்தை மூடி பேசி வந்த ஆலங்குளத்தைச் சேர்ந்த திலீபன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை மகன் திலீபன் (35), - உளறி கொட்டவா - எனும் தனது யு-டியூப் பக்கத்தில் பெண்களை அவ மதிக்கும் விதமாகவும், பெண் குழந்தைகள் அதிக மாகப் பிறப்பதால் பெற்றோர் பாதிக்கப்படுவதாகவும் கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.மேலும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியும் உரிமையை பெற்றோர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாகவும் திலீபன் பேசினார்.
தமது முகத்தை பாதியாக மறைத்துக் கொண்டு வீடியோ வெளியிடும் அவர் மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக தென்காசி சைபர் கிரைம் பிரிவிற்கு புகார்கள் வந்தன. விசாரணை நடத்திய போலீசார், திலீபனை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொடுமுடியாறு அணையில் நவ.10ம் முதல் தண்ணீர் திறப்பு : தமிழக அரசு ஆணை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:53:55 PM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பு: குஷ்பு குற்றச்சாட்டு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:02:56 PM (IST)

துர்கா ஸ்டாலினை அநாகரிகமாக பேசியதாக பாஜக நிர்வாகி மீது திமுக வழக்கறிஞர் அணி புகார்!
வெள்ளி 7, நவம்பர் 2025 4:35:02 PM (IST)

எஸ்.ஐ.ஆர் என்பது ஜனநாயக படுகொலை : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி
வெள்ளி 7, நவம்பர் 2025 4:15:30 PM (IST)

மூதாட்டிகள் இருவரை கொன்று நகை கொள்ளை : கொலையாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்!
வெள்ளி 7, நவம்பர் 2025 12:40:16 PM (IST)


.gif)