» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவண்ணாமலை அருகே அரசு பஸ்- கார் நேருக்கு நேர் மோதல்: லாரி உரிமையாளர்கள் 4 பேர் பலி!
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:29:55 AM (IST)

கீழ்பென்னாத்தூர் அருகே அரசு பஸ் - கார் நேருக்கு நேர் மோதி புதுச்சேரியை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை வழியாக நேற்று அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரில் புதுச்சேரி மாநில லாரி உரிமையாளர் சங்க செயலாளர் ஸ்டாலின் (வயது 44), லாரி உரிமையாளர்களான சைலேஷ்குமார் (38), சரோப் ஞானசேகரன் (50), சதீஷ்குமார் (52) ஆகிய 4 பேர் இருந்தனர்.
இவர்கள் தொழில் சம்பந்தமாக பெங்களூருவுக்கு சென்று விட்டு புதுச்சேரிக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை ஸ்டாலின் ஓட்டினார். அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் இவர்களது கார் புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சோ.காட்டுகுளம் அருகே இவர்களது கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ்சும், இவர்களது காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் காரில் பயணம் செய்த புதுச்சேரி மாநில லாரி உரிமையாளர் சங்க செயலாளர் ஸ்டாலின் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அதிகாலை நேரம் என்பதால் காரை ஓட்டியவர் லேசாக கண்ணயந்திருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.தொடர்ந்து 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்தால் திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பவுர்ணமி தினம் என்பதால் திருவண்ணாமலை கிரிவலம் முடிந்துவிட்டு திருவண்ணாமலையில் இருந்து வந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் 4 பெட்டிகள் அதிகரிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்குழந்தை கொடூர கொலை: தாய், 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 25, ஏப்ரல் 2025 7:35:07 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மீது வேன் மோதல்: குழந்தைகள், பெண்கள் உட்பட 18 பேர் காயம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:00:16 PM (IST)

என்டிபிஎல் அனல்மின் நிலைய ஊழியர்கள் 9வது நாளாக போராட்டம் : 750 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு
வெள்ளி 25, ஏப்ரல் 2025 4:22:49 PM (IST)

மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்: முதல்வர் ஸ்டாலின்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 4:13:12 PM (IST)

திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமை யாருக்கு? பொது அறிவிப்பு வெளியீடு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 3:53:52 PM (IST)
