» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம்: ஸ்டாலின் அறிவிப்பு
வெள்ளி 11, ஏப்ரல் 2025 11:16:17 AM (IST)
திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே மகளிர் விடியல் பயணத் திட்டப் பயனாளர்களை ஓசி பேருந்து பயணம், மனு கொடுக்க வந்த பெண்ணிடம் சாதியை சுட்டிக் காட்டிப் பேசியது என்று அமைச்சர் பொன்முடி பேச்சால் எழுந்த சர்ச்சைகள் திமுக அரசுக்கு நெருக்கடியாக அமைந்தன.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் பேசியதாகத் தெரிகிறது. அந்தப் பேச்சு அடங்கிய வீடியோ நேற்று முதல் சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் சூழலில் பொன்முடி திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது அமைச்சர் பதவியும் பறிபோகுமா என்ற சலசலப்புகள் கட்சிக்குள் எழுந்துள்ளன.
இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பதவி நீக்கத்துக்கான காரணத்தை அந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை.
கனிமொழி கண்டனம்
திமுக எம்.பி. கனிமொழி இன்று (வெள்ளிக்கிழமை) காலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார். இது பொன்முடியின் அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய சறுக்கலாகப் பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
தமிழன்Apr 11, 2025 - 07:10:31 PM | Posted IP 172.7*****
ஆடிய ஆட்டம் என்ன. பேசிய வார்த்தை என்ன. தேடிய செல்வம் என்ன.முற்றிலும் இந்த ஆளுக்கு பொருந்தும்.போக்ஸோ சட்டத்தில் கைது செய்யுங்கள். தி மு க. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தூக்குங்கள்.
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் 4 பெட்டிகள் அதிகரிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்குழந்தை கொடூர கொலை: தாய், 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 25, ஏப்ரல் 2025 7:35:07 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மீது வேன் மோதல்: குழந்தைகள், பெண்கள் உட்பட 18 பேர் காயம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:00:16 PM (IST)

என்டிபிஎல் அனல்மின் நிலைய ஊழியர்கள் 9வது நாளாக போராட்டம் : 750 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு
வெள்ளி 25, ஏப்ரல் 2025 4:22:49 PM (IST)

மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்: முதல்வர் ஸ்டாலின்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 4:13:12 PM (IST)

திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமை யாருக்கு? பொது அறிவிப்பு வெளியீடு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 3:53:52 PM (IST)

இதுApr 12, 2025 - 09:57:23 PM | Posted IP 162.1*****